கோலாகலமாக நடக்கும் தாத்தாவின் 80-வது பிறந்த நாள், எழில் வருவாரா? எதிர்பார்ப்பில் பாக்கியலட்சுமி

0
401
- Advertisement -

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த வாரம் எழிலுக்கு மீண்டும் சினிமா வாய்ப்பு கிடைக்காததை தெரிந்த ஈஸ்வரி, மோசமாக திட்டி இருந்தார். பின் ஜெனி கர்ப்பமாக இருப்பது வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து சந்தோஷப்பட்டு இருந்தார்கள். உடனே அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி, நீ எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறாய்? உங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டாமா? என இந்த முறை மோசமாக திட்டி இருந்தார். இதனால் அமிர்தா மனமுடைந்து எழில் இடம் சொல்ல, எழில் தன்னுடைய பாட்டி ஈஸ்வரியிடம் கோபப்பட்டு பேசி இருந்தார்.

-விளம்பரம்-

பின் இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் பாக்யாவுக்கு கோபம் வந்து, நீ வீட்டை விட்டு வெளியே போ எழில் என்று சொல்ல, எல்லோருமே அதிர்ச்சியானார்கள். கடைசியில் எழில் வீட்டை விட்டுப் போவதை பார்த்து பாக்கியா மனம் உடைந்து எதுவும் பேசாமல் இருந்தார். இந்த விஷயத்தை எல்லாம் இனியா தன்னுடைய அப்பா கோபியிடம் சொல்லி அழுதார். பின் கோபி, எழில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்று இருந்தார். ஆனால் எழில் முகம் கொடுத்து கூட பேசவில்லை. இன்னொரு பக்கம் பாக்கியா, எழில் ரூமிற்கு போய் அங்கிருக்கும் பொருட்களை பார்த்து அழுது, அமிர்தாவுக்கு போன் செய்து பேசி இருந்தார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

இந்த வாரம் கோபி, தன்னுடைய மகன், மருமகள் வீட்டை விட்டு வெளியே போனது குறித்து சொல்ல, ராதிகா கோபத்தில் பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . மறுநாள் வீட்டில் தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஈஸ்வரிடம் இந்த விஷயத்தை சொல்ல ஆரம்பத்தில் அவர் மறுத்தாலும் பிறகு சம்மதித்து விடுகிறார். அமிர்தா-எழில் இருவருமே வீட்டில் நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி, தாத்தாவின் 80வது பிறந்தநாளுக்கு வரவேண்டும் என்று கூப்பிட, அதற்கு எழில் வர மறுத்தார்.

சீரியல் கதை:

உடனே கோபமாக ஈஸ்வரி, நீ வராதே என்று சொல்லி போனை வைத்து விட்டார். மேலும், எழில் வராததை நினைத்து ஈஸ்வரி வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் அமிர்தா, நான் வரவில்லை. நீங்கள் போயிட்டு வாங்க, தாத்தா ரொம்ப சந்தோஷப்படுவார் என்று சொல்ல, நீ இல்லாத இடத்திற்கு நான் போக மாட்டேன் என்று எழில் அவருக்கு ஆறுதலாக பேசுகிறார். பாட்டி தன்னுடைய கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல 12 மணி வரை காத்து இருந்து வாழ்த்துக்கள் சொல்லி சர்ப்ரைஸ் பண்ணுகிறார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோடில், ராமமூர்த்தியின் 80 ஆவது பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே தயாராகி இருந்தார்கள். ஆனால் தாத்தாவோ, எழில் போன் பண்ணாதது நினைத்து வருத்தப்பட்டு இருந்தார். எல்லோரும் கோவிலுக்கு கிளம்புகிறார்கள். இதை வெளியில் இருந்து பார்த்த கோபி, எதற்கு கிளம்புகிறார்கள்? என்ன வீட்டில் விசேஷம்? என்று குழப்பத்தில் செழியனுக்கு கால் செய்தார். ஆனால், அவர் எடுக்கவே இல்லை. இந்தநிலையில் இன்றைய எபிசோடில், பாக்கியா குடும்பம் எல்லோருமே கோயிலுக்கு சென்று விடுகிறார்கள். அங்கு தடபுடலாக தாத்தாவின் பிறந்த நாள் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது.

இன்றைய எபிசோட்:

இருந்தாலும் எழில் வராததை நினைத்து ஒவ்வொருவருமே வருத்தப்படுகிறார்கள். தாத்தாவின் பிறந்தநாளுக்கு உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது எழில் வராததை குறித்து கேள்வி கேட்க, ஜெனிக்கு கோபம் வந்து பதிலடி கொடுக்கிறார். இன்னொரு பக்கம் செழியன் போன் எடுக்காதது நினைத்து கோபி வருத்தப்பட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார். பின் தாத்தா- பாட்டி இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் போது எழில் வந்து நிற்கிறார். இதை பார்த்தவுடன் மொத்த குடும்பமே சந்தோஷப்படுகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement