பாக்கியா செய்த உதவி கோபிக்கு தெரிய வருமா? ஜெனி- செழியன் சேர்வார்களா? – பரபரப்பில் பாக்யலட்சுமி.

0
605
- Advertisement -

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் என்றால் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி பின் சுற்றி கொண்டிருக்கிறார்.
இப்படி இருக்கும் நிலையில் செழியனின் உண்மை முகத்தை அறிந்து ஜெனி வீட்டை விட்டு வெளியேறி விவாகரத்து கொடுக்கிறார். பின் செழியன் மனம் மாறி ஜெனி உடன் சேர்ந்து வாழ நினைக்கிறார். இன்னொரு பக்கம், அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் வருகிறார். அமிர்தாவையும் தன் குழந்தையும் கையோடு அழைத்துச் செல்ல கணேஷ் முயற்சிக்கிறார். இந்த உண்மை பாக்கியாவுக்கு தெரிகிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

அதே சமயம் கணேஷ் உயிருடன் இருக்கும் விஷயம் எழில், அமிர்தா, பாக்கியா குடும்பத்திற்கு தெரிய வருகிறது. கணேஷ், பாக்கியா குடும்பத்துடன் சண்டை போடுகிறார். பின் கணேஷ் உடன் செல்ல அமிர்தா மறுக்கிறார். இன்னொரு பக்கம் ஜெனி தன்னுடைய குழந்தைக்கு பெயர் வைக்க ஏற்பாடு செய்கிறார். அப்போது செழியன், ஈஸ்வரி இருவரும் குழந்தையை யாருக்கும் தெரியாமல் அழைத்துக் கொண்டு வருகிறார்கள். இதை அறிந்து பாக்யா குழந்தையை ஜெனியிடம் ஒப்படைத்துவிட்டு செழியனை கண்டிக்கிறார். இதனால் ஈஸ்வரி, செழியன் இருவருக்குமே பாக்யா மீது கோபம் ஏற்படுகிறது.

சீரியல் கதை:

இப்படி இருக்கும் நிலையில் அமிர்தாவை எப்படியாவது தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கணேஷ் போராடுகிறார். இதனால் திட்டம் போட்டு அமிர்தா-குழந்தை இருவரையும் கணேஷ் கடத்தி செல்கிறார். இந்த விஷயம் எழிலுக்கு தெரிய வருகிறது. பின் மொத்த குடும்பத்திற்கும் அமிர்தா கடத்தி சென்ற விஷயம் தெரிகிறது. எழில்- செழியன் இருவருமே பழனி சாமியிடம் உதவி கேட்கிறார்கள். ஒரு வழியாக அமிர்தாவை எழில் காப்பாற்றி விடுகிறார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

இப்படி இருக்கும் நிலையில் கோபி தன்னுடைய அலுவலகத்தை இழுத்து மூடின விஷயம் ராதிகாவிற்கு தெரிய வருகிறது. இதை வீட்டில் உள்ள எல்லோரிடமும் ராதிகா சொல்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி ஆகி விடுகிறார்கள். வழக்கம் போல் ஈஸ்வரி அழுது கொண்டிருக்கிறார். மேலும், நேற்று எபிசோட்டில் தான் திறக்க இருக்கும் ரெஸ்டாரண்டை கோபி பார்த்துக்க சொல்லி பாக்கியா கேட்கிறார். இதனால் கோபப்பட்டு கோபி- ராதிகா இருவருமே பாக்யாவை திட்டி விடுகிறார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றையக்கான எபிசோடில் பாக்யா தன்னிடம் இருந்த நகைகளை எல்லாம் ஈஸ்வரிடம் கொடுத்து, உங்களுடைய மகன் தொழிலை ஆரம்பிக்க கொடுங்கள். அவருக்கும் எனக்கும் எந்த உறவு இல்லை என்றாலும் அவர் கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை. நீங்கள் செய்யுங்கள் என்று கொடுக்கிறார். இதனால் ஈஸ்வரியும் எதுவும் பேசாமல் வாங்கிக் கொள்கிறார். இனிவரும் நாட்களில் கோபி புதிய தொழிலை தொடங்குவாரா? பாக்கியா செய்த உதவி கோபிக்கு தெரிய வருமா? ஜெனி- செழியன் சேர்வார்களா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது

Advertisement