விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா சூப்பராக நடனமாடி முதல் ஃபைனலிஸ்டாக தேர்வாகியிருந்தார். அப்போது அவர் மேடையில் தன்னுடைய அம்மா, அப்பா இருவரையும் அழைத்துக் கொண்டு போய் பேசி இருந்தார். இதையெல்லாம் டிவியில் பார்த்த ராதிகா வருத்தப்பட்டு இருந்தார். பின் ராதிகா வீட்டிற்கு வந்த பாக்கியா, மயூவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி, பரிசு கொடுத்தார். அப்போது ராதிகா, இனியா கல்லூரி விழா மேடையில் நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்தேன் என்று சொன்னார்.
அதற்கு பாக்கியா, இனியாவின் அப்பாவாகவும், அம்மாவாகவும் தான் அங்கு இருந்தோம். மற்றபடி வேறு எதுவுமே இல்லை என்று சொல்லிவிட்டு கிளம்பினார். பின் மயூ பர்த்டேவிற்கு கிளம்பிய கோபியை, ஈஸ்வரி- இனியா எல்லோருமே போகவிடாமல் தடுத்தார்கள். உடனே ஈஸ்வரி, நாம குலதெய்வ கோவிலுக்கு போகணும். எல்லோரும் கிளம்புங்கள் என்று சொன்னார். கோபியால் எதுவும் பேச முடியவில்லை. ஆனால், பாக்கியா முடியாது என்று மறுத்து விட்டார். கடைசியில் செழியன், இனியா, ஈஸ்வரி,கோபி தான் கோயிலுக்கு போனார்கள்.
பாக்கியலட்சுமி:
கோபி தன்னுடைய குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லும் விஷயத்தை அறிந்த ராதிகா, கோபப்பட்டு வீட்டை காலி செய்வதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தார். இதை அறிந்த பாக்கியா, ராதிகாவிடம் தனியாக பேச அழைத்தார். பாக்கியா- ராதிகா இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாக்கியா எடுத்து சொல்லியும், ராதிகா கேட்காமல் கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் கோபி தன்னுடைய அம்மா, பிள்ளைகளுடன் சந்தோஷமாக கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார். இதை போட்டோ எடுத்து இனியா சோசியல் மீடியாவில் போட்டு இருந்தார்.
நேற்று எபிசோட்:
இதை பார்த்த பாக்கியாவுக்கு இன்னும் கோபம் அதிகமானது. இன்னொரு பக்கம் ராதிகா, இனியா வைத்த ஸ்டேட்டஸை பார்த்து வேதனைப்பட்டார். அதன் பின் ஈஸ்வரி, கோபி, செழியன், இனியா எல்லோருமே கோயிலுக்கு போயிருந்தார்கள். அப்போது ஈஸ்வரி, நீ எங்களை விட்டு எங்கேயுமே போகக்கூடாது. சத்தியம் செய் என்றார். கோபியும் சத்தியம் செய்து இருந்தார். நேற்று எபிசோடில் ராதிகா வீட்டை காலி செய்யும் விஷயம் பாக்கியாவுக்கு தெரிய வந்தது. பின் இதை போனில் இனியாவிடம் சொன்னார் பாக்கியா. இதை இனியா, ஈஸ்வரி இடம் சொன்னார். உடனே அவர், இந்த விஷயம் கோபிக்கு தெரியக்கூடாது. ராதிகா அங்கிருந்து போகட்டும் என்றார்.
இன்றைய எபிசோட்:
இன்னொரு பக்கம் ராதிகா, தன்னுடைய அம்மா, மயூவை புது வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பின் அவர் அந்த வீட்டில் ரொம்ப வருத்தத்தோடு படுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து பாக்கியா அவருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தார். பின் இருவரும் மனது விட்டு பேசி இருந்தார்கள். ராதிகாவின் பசி அறிந்த பாக்யா, அவருக்கு சாப்பாடு கொடுத்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் கோயில் ட்ரிப் முடிந்து எல்லோரும் வீட்டிற்கு வருகிறார்கள். பின் அங்கு நடந்த விஷயத்தை எல்லாம் ஈஸ்வரி, கோபி சொல்லி சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாம் கேட்டு பாக்கியாவிற்கு கோபம் தான் அதிகமானது.
சீரியல் ட்ராக்:
பின் பாக்கியா, கோபி இடம் தனியாக அழைத்து பேசுகிறார். அப்போது அவர், ராதிகா வீட்டை விட்டு கிளம்புகிறார். இந்த வீட்டில் இருந்தவர்களுக்கு தான் துரோகம் செய்தீர்கள். உங்களை நம்பி வந்தவர்களையும் இப்படி ஏமாற்றுவதா? என்று ரொம்ப ஆவேசமாக பேசுகிறார். கோபியால் எதுவுமே பேச முடியவில்லை. பாக்கியா சொன்னதை கேட்டு கோபி ரொம்ப எமோஷனல் ஆகிறார். பின் கோபி, நான் ராதிகாவை பார்க்க போகிறேன் என்றவுடன் ஈஸ்வரி வேண்டாம் என்று தடுக்கிறார். ஆனால், கோபி கேட்கவில்லை. இனியா- செழியன் இருவருமே ஈஸ்வரியுடன் சேர்ந்து ராதிகாவை பார்க்க வேண்டாம் தடுக்கிறார்கள். ஆனால், பாக்கியா திட்டி விட்டு அங்கிருந்து செல்கிறார். கோபியும் ராதிகாவை பார்க்க செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.