பாக்கியா கேட்ட கேள்வியால் வாயடைத்து போன கோபி, வேதனையில் தவிக்கும் ராதிகா – பாக்கியலட்சுமி

0
227
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபிக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறார் ஈஸ்வரி. பின் பாக்கியா பம்பரமாக வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து கோபி ஆச்சரியப்பட்டு தன்னுடைய அம்மாவிடம் கேட்க, அவருமே பாக்கியாவை புகழ்ந்து பேசி இருந்தார். கோபியை பார்க்க வந்த ராதிகாவை உள்ளே விடாமல் ஈஸ்வரி தடுக்க, பாக்யா உள்ளே அனுப்பி வைத்தார். ஆனால், கோபி தூங்கிக் கொண்டிருந்ததால் ராதிகா எதுவும் பேசாமல் கிளம்பி விட்டார். பின் பாக்கியா- கோபியை சேர்த்து வைப்பதற்காக தேவையில்லாத வேலைகளை ஈஸ்வரி செய்தார்.

-விளம்பரம்-

இதை கவனித்த செல்வி, பாக்யாவிடம் சொல்ல, அவர் கோபப்பட்டு பேசி இருந்தார். இன்னொரு பக்கம் ராதிகா, கோபி போன் பண்ணுவார் என்று எதிர்பார்த்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். ஆனால், அவர் போன் செய்யவில்லை. மேலும், தனக்கு கிடைத்த ஆர்டரை பற்றி பாக்கியா வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது புது மெனு கார்டு வந்ததால் என்ன செய்வது என்று புரியாமல் புலம்பி இருந்தார். உடனே கோபி, அதற்கான ஒரு செஃப்பை வைத்து சமைத்துக் கொள்ளலாம் என்றவுடன் பாக்யா அமைதியாக இருந்தார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

பாக்கியாவின் ஆர்டருக்கு கோபி சில ஐடியாக்களை சொன்னார். இதை கேட்டு எல்லோருமே பாராட்ட, பாக்கியா மட்டும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் எல்லோரும் தூங்கிய பிறகும் பாக்யா வேலை செய்து கொண்டிருந்தார். அதை பார்த்த கோபி வருத்தப்பட்டு அவரிடம் பேசி இருந்தார். ஆனால், பாக்யா, அதை பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் பார்க்கில் பாக்கியாவிடம் கோபி தனியாக பேச முயற்சித்தார். நேற்று எபிசோட்டில் கோபி, உனக்குள் நிறைய திறமைகள் இருக்கு. ஒருவேளை நான் உன்னை சரியாக புரிந்து இருந்தால் நம்ம ரெண்டு பேரும் பிரிந்து இருக்கவே மாட்டோம்.

நேற்று எபிசோட்

நான் நன்றாக பார்த்துக் கொண்டிருப்பேன் என்று சொன்னார். இதை எல்லாம் அங்கு வந்த ராதிகா கேட்டு ரொம்ப வருத்தப்பட்டு கிளம்பி விட்டார். உடனே கோபத்தில் பாக்யா, நீங்கள் என் வாழ்க்கையில் இருந்து போன பிறகு தான் நான் நிம்மதியாக இருக்கிறேன் என்று திட்டி விட்டு கிளம்பி விட்டார். பின் ராதிகா, பார்க்கில் நடந்ததை தன்னுடைய அம்மாவிடம் சொல்லி வருத்தப்பட, அவர் ஆறுதல் சொன்னார். பின் ராதிகா, பாக்கியா வீட்டிற்கு வந்தார். அவரை பார்த்தவுடன் ஈஸ்வரி திட்ட, பாக்கியா தடுத்து ராதிகாவை உள்ளே அனுப்பி விட்டார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராதிகா, வீட்டிற்கு வாருங்கள். ஏன் அங்கே வரவில்லை என்று கேட்க, இங்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. உடம்பு சரியானவுடன் நான் வந்து விடுகிறேன். என்னுடைய அம்மா, பிள்ளைகள் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். நான் பாக்கியாவை பழிவாங்க நினைத்து தப்பு என்று தன்னுடைய குடும்பத்தை பற்றியே கோபி பேசுகிறார். இதனால் ராதிகாவிற்கு இன்னும் கோபம் அதிகமாகி வெளியில் கிளம்பி விட்டார். அப்போது ஈஸ்வரி, கோபியை விவாகரத்து செய்துவிடு. உன்னுடன் அவன் வரமாட்டான் என்று சொல்ல, ராதிகா இன்னும் கோபப்படுகிறார்

சீரியல் ட்ராக்:

அதற்கு பின் செழியன் தனக்கு வேலை கிடைத்த விஷயத்தை வீட்டில் சொல்ல எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். அந்த சமயம் பார்த்து பாக்யா வீட்டிற்கு வந்தார். பின் அவர், தனியாக பேச கோபியை அழைத்து போனார். அப்போது பாக்கியா, காபி கொடுத்துவிட்டு உங்களுடைய உடம்பு எப்படி இருக்கிறது என்று கேட்க, அவரும் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார். உடனே பாக்கியா, எப்போது உங்க வீட்டுக்கு போகிறீர்கள்? உங்களால் ராதிகா ரொம்ப கஷ்டப்படுகிறார். இங்கே நீங்க தங்க முடியாது என்று கேட்க, கோபியால் எதுவுமே பேச முடியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement