ராதிகாவால் மீண்டும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோபி, பாக்கியா என்ன செய்ய போகிறார்? பாக்கியலட்சுமி

0
240
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகா, மயூ இருவரும் வீட்டை விட்டு வெளியே கிளம்பி விட்டார்கள். அதை பார்த்து கோபி ரொம்பவே மனமுடைந்து விட்டார். பாக்கியாவுமே ரொம்ப வேதனைப்பட்டார். ஆனால், ஈஸ்வரி- இனியா மட்டும் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள். வேதனையில் கோபி யாரிடமும் சரியாக பேசாமல் ராதிகாவை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ராதிகா, தன்னுடைய அம்மாவிடம் நடந்ததை எல்லாம் சொன்னவுடன் அவர் கோபப்பட்டு திட்டினார்.

-விளம்பரம்-

கடைசியில் கோபி, ராதிகாவை பார்க்க கிளம்பினார். ஆனால், ஈஸ்வரி தடுத்தார். ஈஸ்வரி பேச்சை மீறி ராதிகாவை பார்க்க கோபி சென்று விட்டார். இதனால் கோபப்பட்ட ஈஸ்வரி, ராதிகாவை திட்டிக்கொண்டு இருந்தார். இதையெல்லாம் கேட்ட பாக்கியா கோபத்தில் பொங்கி எழுந்து ஈஸ்வரிடம் சண்டை போட்டார். பின் ஈஸ்வரி – பாக்கியா இருவருக்குமே வாக்குவாதம் அதிகமாகி இருந்தது. ஒரு கட்டத்தில் பாக்யா, குழந்தைகளுக்கு நல்லது சொல்லிக் கொடுங்கள்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

உங்கள் பிள்ளையை உங்கள் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், திருமணமே செய்திருக்க கூடாது. என் வாழ்க்கையை ஏன் கெடுத்தீர்கள் என்று தன்னுடைய மனதில் இருந்த ஆதங்கத்தை எல்லாம் கொட்டி தீர்த்தார். ஈஸ்வரியால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் ராதிகா வீட்டிற்கு சென்ற கோபி, இந்த முடிவை எதற்காக எடுத்தாய்? என்று கேட்க, இனி நீங்கள் என் வாழ்க்கையில் இல்லை. என்னையும் மயூவையும் பார்க்க வராதீர்கள். இது என்றுமே நிரந்தரம் தான்.

கடந்த வாரம் எபிசோட்:

உங்களால் எங்களுடைய வாழ்க்கை பாதிக்கக் கூடாது என்றெல்லாம் ராதிகா சொல்ல, கோபி ரொம்பவே மனமடைந்து விட்டார். பின் அவர் வேதனையில் மீண்டும் குடிப்பழக்கத்திற்கு சென்றார். பாரில் தன் நண்பர் செந்திலுடன் சேர்ந்து குடிக்கிறார். அவர் எவ்வளவு சொல்லியும் கோபி கேட்கவில்லை. இன்னொரு பக்கம் ராதிகா அம்மா, அட்வைஸ் செய்கிறார். ஆனால், ராதிகா கேட்கவில்லை. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, ராதிகா சொன்ன வார்த்தையை நினைத்து புலம்பி நிலை தெரியாத அளவிற்கு குடிக்கிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோபி வீட்டிற்கு வராதது நினைத்து வீட்டில் கவலைப்பட்டு கொண்டிருக்கிறார். பின் அவர், நல்லவள் மாதிரி பேசி என் மகனின் மனதை கெடுத்து விட்டு போயிட்டாள் என்றெல்லாம் ராதிகாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் கேட்ட ஜெனிக்கு கோபம் வந்து ஈஸ்வரிடம் வாக்குவாதம் செய்கிறார். உடனே செழியன், ஜெனியை திட்டி அனுப்பி விடுகிறார். அதன் பிறகு நிலை தெரியாத அளவிற்கு குடித்துவிட்டு கோபி வீட்டிற்கு வருகிறார்.

சீரியல் ட்ராக்:

அவரை பார்த்தவுடன் ஈஸ்வரி ரொம்பவே வருத்தப்படுகிறார். அப்போது கோபி, போதையில் பாக்கியா- ராதிகா இருவரையும் பற்றி உளறிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் கேட்ட பாக்கியாவுக்கு கஷ்டமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோபியின் நிலையை நினைத்து தன் கணவரிடம் புலம்பி கொண்டிருக்கிறார். மறுநாள் காலையில் பாக்கியா, ராதிகாவின் வீட்டுக்கு சென்று இருக்கிறார். அங்கு ராதிகாவின் அம்மா, தன் மகள் வாழ்க்கையை பற்றி வருத்தமாக பாக்யாவிடம் பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement