கோபியின் மனம் மாற்றத்தால் பாக்கியா- ராதிகா எடுக்க போகும் முடிவு என்ன? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
102
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியா முழு மனது இல்லாமல் கோபி இடம் உதவி கேட்டார். கோபியும் சரி என்றார். ஈஸ்வரி, எப்படியாவது பாக்கியா- கோபியை சேர்த்து வைக்க வேண்டும். அதற்கான வேலையை நான் செய்யப்போகிறேன் என்று சொன்னார். உடனே செழியன், எப்படி முடியும் என்று சொல்ல, அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் ஈஸ்வரி. பின் ராதிகா- கோபி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோபி இனியா டான்ஸ் காம்பிடிசன் பற்றியும், பாக்கியாவின் திறமையும் பற்றி பேசி கொண்டே இருந்தார். இதனால் வெறுப்பான ராதிகா தூங்கி விட்டார். நேற்று எபிசோட்டில் மையூ, ஈஸ்வரி சொன்னதை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

இதை அறிந்த பாக்கியா அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். இருந்தாலுமே மையூவின் மனம் மாறவில்லை. பின் இனியா, போட்டியில் வென்றதற்காக மயூவுக்கு பரிசு கொடுத்தார். பின் பாக்கியா, தன்னுடைய புதிய ஆர்டருக்கான வேலையில் மும்முரமாக செய்து கொண்டிருக்கிறார். அப்போது கோபி, தன்னுடைய செப்புகளை அழைத்து வந்து பாக்கியாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். கோபியின் செயலை பார்த்து எல்லோருமே பாராட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் ராதிகா, கோபிக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது கோபி, சமையல் ஆர்டரை பற்றியும், பாக்யா செய்யும் வேலையைப் பற்றியும் ரொம்ப புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

இதையெல்லாம் கேட்டு ராதிகாவிற்கு வெறுப்பு தான் வந்தது. அதற்குப்பின் வீட்டில் பாக்யா, வேறு வழியில்லாமல் தான் கோபி சொன்ன ஆஃபரை ஏற்றுக்கொண்டேன். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்று சொன்னார். நேற்று எபிசோட்டில் ராதிகா, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கோபி, அவருடைய தவறு உணர்ந்து உதவி செய்கிறார் என்று கூறி இருந்தார். மறுநாள் காலையில் சமையல் ஆர்டருக்கான வேலைகள் மும்முரமாக நடந்தது. கோபியும் பாக்யாவிற்கு உதவியாக சமையல் செய்து இருந்தார். பரபரப்பாக பாக்கியா வேலை செய்வதை பார்த்து கோபி ஆச்சரியப்பட்டார்.

நேற்று எபிசோட்:

பின் இதை பற்றி தன்னுடைய அம்மாவிடம் பேச, அவருமே பாக்கியாவை புகழ்ந்து பேசி இருந்தார். பின் ஆர்டர் கொடுத்தவர் சமையல் நடக்கும் இடத்திற்கு வந்து இருந்தார். உடனே தான் சமைத்த உணவுகள் எல்லாம் பாக்கியா கொடுக்க, அவரும் சாப்பிட்டு பார்த்து பாக்யாவின் சமையலை பாராட்டி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, நல்லபடியாக தன்னுடைய சமையல் ஆர்டரை செய்து முடித்து விடுகிறார். கோபி, பாக்கியாவின் திறமையை பாராட்டி பேசிருந்தார். அதற்கு அவர் நன்றி சொல்கிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

அதற்கு பின் வீட்டில் ஈஸ்வரி, ராதிகாவை வெறுப்பு ஏற்றுவது போல் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி, நீ என் மகனை விட்டு சென்றுவிடு. கோபி- பாக்கியா இருவருமே சேர்ந்து விடுவார்கள். நீ அவனை விவாகரத்து செய்துவிடு என்றெல்லாம் சொல்கிறார். இதனால் கோபப்பட்ட ராதிகா, ஈஸ்வரியை பயங்கரமாக திட்டுகிறார். ராதிகா பேசிய பேச்சால் ஈஸ்வரியால் வாயை திறக்க முடியவில்லை. அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது பாக்கியா, கோபி உதவி செய்ததற்கு பணம் கொடுக்கிறார். ஆனால், அவர் வாங்க மறுத்தார். இருந்தும் விடாமல் பாக்கியா கொடுத்து விட்டு, நீங்கள் இன்னும் இந்த வீட்டில் தங்குவதற்கு இரண்டு நாளைக்கு தான் வாடகை கொடுத்து இருக்கிறீர்கள். எப்போது காலி செய்வீர்கள்? என்று கேட்டதற்கு ராதிகா, ரெண்டு நாளில் காலி செய்து விடுவோம் என்று சொன்னவுடன் ஈஸ்வரி- இனியா பதறுகிறார்கள். கோபிக்கும் இந்த வீட்டை விட்டு கிளம்பி விருப்பமில்லை. இதைப் பற்றி ராதிகாவிடம் பேசுகிறார். அப்போது ராதிகா, முடியாது இங்கிருந்து கிளம்பலாம் என்று சொன்னவுடன் கோபி மறுக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement