விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபிக்கு நெஞ்சுவலி வந்ததால் பாக்கியா ஹாஸ்பிடலில் சேர்த்தார். ராதிகாவிற்கு தகவலை சொல்ல பாக்கியா போன் செய்தார். ஆனால், அவருடைய போன் ரீச் ஆகவில்லை. கோபியின் உடல்நிலை சீரியசாக இருப்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார் மருத்துவர். பின் உண்மை அறிந்த ஈஸ்வரி, செழியன், இனியா எல்லோருமே ஹாஸ்பிடலுக்கு வந்தார்கள். இந்த விஷயத்தை எப்படியாவது ராதிகாவிடம் சொல்ல வேண்டும் என்றார் பாக்கியா. ஆனால், ஈஸ்வரி கோபப்பட்டு திட்டி இருந்தார்.
ஹாஸ்பிடலில் கோபிக்கு மும்முரமாக சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்கள். என்ன நடக்குமோ? என்ற பயத்தில் ஈஸ்வரி புலம்பி அழுது இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் ராதிகா, கோபி வராததை நினைத்து புலம்பி கொண்டிருந்தார். பின் ராதிகா, கோபிக்கு போன் செய்தார். அதை பார்த்தவுடன் ஈஸ்வரி ஃபோனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இன்னொரு பக்கம் கோபிக்கு சிகிச்சை நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்தது.
பாக்கியலட்சுமி:
இந்த தகவலை அறிந்து அமிர்தா, ஜெனி எல்லோருமே ஹாஸ்பிடலுக்கு போனார்கள். ஒரு கட்டத்தில் பாக்யா வீட்டிற்கு சென்றார் ராதிகா. ஆனால், அங்கு யாருமே இல்லை. நேற்று எபிசோட்டில், ஹாஸ்பிடலில் எல்லோருமே கோபியை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது பாக்கியா, வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்து விட்டு வாருங்கள் என்று ஈஸ்வரியை அழைத்துக் கொண்டு வந்தார். இன்னொரு பக்கம் ராதிகா கோபியை தேடி அலைந்து கொண்டிருந்தார். ஆனால், அவர் எங்குமே கிடைக்கவில்லை.
கடந்த வாரம் எபிசோட்:
மேலும், கோபியை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு ஈஸ்வரி பேசிக் கொண்டிருந்தார். இது எல்லாம் பார்த்து செல்விக்கு பயங்கர கடுப்பாகி இருந்தது. அதற்கு பின் ஹாஸ்பிடலுக்கு வந்த பாக்கியா, ராதிகாவிற்கு ஃபோன் செய்து வரவைத்து நடந்ததை சொன்னார். அதைக் கேட்டவுடன் ராதிகா அதிர்ச்சி ஆனார். பின் கோபியை பார்க்க உள்ளே போக, ஈஸ்வரி பயங்கரமாக ராதிகாவிடம் சண்டை போட்டார். உடனே எழில், பாக்கியா இருவருமே தடுத்து விட்டார்கள். கோபியை நினைத்து ராதிகா ரொம்ப கவலைப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபியை நினைத்து ராதிகா ரொம்பவே புலம்பி அழுது கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த ஈஸ்வரி, தகாத வார்த்தையால் ராதிகாவை திட்டி விடுகிறார். பாக்யா- எழில் தடுத்துமே ஈஸ்வரி கேட்கவே இல்லை. எவ்வளவு திட்டியும் ராதிகா அந்த இடத்திலேயே இருந்தார். ஒரு கட்டத்தில் ஈஸ்வரி, உன்னால் தான் என் மகன் சாகப் போகிறான் என்று சொன்னவுடன் மனம் உடைந்து ராதிகா வெளியே வந்து விடுகிறாள்.
சீரியல் ட்ராக்:
பின் பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்கிறார். அப்போது பாக்கியா, தகவலை சொல்ல எவ்வளவோ முயற்சி செய்தும் உங்களுடைய போன் ரீச் ஆகவில்லை. யாரும் போன் எடுக்கவில்லை என்று தான் அவர் எனக்கு போன் செய்தார் என்று நடந்ததை சொல்கிறார். அதற்கு ராதிகா, நீங்கள் எல்லாம் ஒன்றாகி விட்டீர்கள். ஒரு குடும்பமாகிவிட்டீர்கள் என்று வருத்தப்பட்டு அங்கிருந்து கிளம்புகிறார். பாக்யாவின் சூழ்நிலையை ராதிகா கூட புரிந்து கொள்ளவில்லை. பாக்கியாவிற்கு ஆறுதல் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.