விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி, தன்னுடைய அம்மா, பிள்ளைகளோடு சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து ராதிகாவிற்கு கோபம் தான் வந்தது. ஆனால், எதுவும் பேச முடியாமல் அமைதியாக தன்னுடைய வேலையை செய்தார். இரவு முழுவதுமே தூங்காமல் கோபி தன்னுடைய குடும்பத்துடன் சந்தோஷமாக விளையாடி,பேசிக் கொண்டு இருந்தார். மையூ, பாக்கியா உடனே தூங்கிக் கொள்கிறேன் என்று சொன்னதால் ராதிகாவிற்கு தனிமையில் இருப்பது போல உணர்ந்தார். பின் பாக்கியா, ஈஸ்வரிக்காக காபி கொண்டு வந்து தந்தார்.
ராதிகாவும் கோபிக்காக காபி போட்டு இருந்தார். உடனே கோபி, பாக்கியா கொடுத்த காபியை குடித்தவுடன் பாராட்டி விட்டு சென்றார். இதையெல்லாம் பார்த்து ராதிகாவிற்கு கோபம் அதிகமாகி அங்கிருந்து கிளம்பி போனார். இப்படி தினமும் ராதிகாவை வெறுப்பேற்றுவதற்கு ஈஸ்வரி தேவையில்லாத வேலைகள் எல்லாம் செய்கிறார். நேற்று எபிசோட்டில் இனியா, மேக்கப் பொருள்கள் எல்லாம் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது போன் வந்தவுடன் அவர் வெளியே போனார். அந்த சமயம் வந்த மையூ, எல்லாத்தையும் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பாக்கியலட்சுமி:
உடனே இனியா, எதையும் போடாதே, எனக்கு பிடிக்காது என்று பொறுமையாக பேசிக் கொண்டிருந்தார். இது தான் சந்தர்ப்பம் என்று ஈஸ்வரி, கோபமாக பேச, மையூ ரொம்பவே அழுதார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே வந்து விட்டார்கள். அப்போது பாக்கியா, இனியா-மையூ இருவரையும் சமாதானம் செய்து ஈஸ்வரிக்கு புத்திமதி சொன்னார். ஆனால், ஈஸ்வரி கேட்கவில்லை. இதை பார்த்து கோபி, பாக்கியாவை பாராட்டி இருந்தார். அதற்குப்பின் கோபி வெளியே கிளம்ப, செழியனை அழைக்க போனார் ஈஸ்வரி.
நேற்று எபிசோட்:
அதற்குள் ராதிகா போகலாம் என்று கோபியை அழைத்து சென்று விட்டார். இதனால் ஆத்திரத்தில் ஈஸ்வரி, ராதிகாவிடம் சண்டை வாங்க காத்துக் கொண்டிருந்தார். அப்போது எழில்- அமிர்தா இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். பின் ராதிகா-கோபியும் வீட்டிற்கு வருகிறார்கள். ஈஸ்வரி, கோபியிடம் கேள்வி கேட்க, ராதிகா பதிலடி கொடுத்தார். அந்த சமயம் பார்த்து கோபிக்கு கொரியர் வந்ததது. அதைச் செழியன் வாங்கி பார்த்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா தொடர்ந்த வழக்குக்கு கோர்ட்டில் ஆஜராக சொல்லி சம்மன் வந்திருக்கிறது.
இன்றைய எபிசோட்:
இதை கேட்டவுடன் வீட்டில் எல்லோருமே அதிர்ச்சி ஆகிறார்கள். கோபத்தில் ஈஸ்வரி, பாக்கியாவிடம் சண்டைக்கு போகிறார். பின் ஈஸ்வரி, நீ கேசை வாபஸ் வாங்கு. என் மகனை காப்பாற்று. இல்லையென்றால் இல்லை நடப்பதே வேறு என்றெல்லாம் மிரட்டுவது போல் பேசி இருந்தார். ஆனால், பாக்கியா எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். பின் கோபி, நான் எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறேன். நான் செய்தது தவறுதான் என்கிறார். பின் ராதிகா-கோபி இருவருமே வழக்கு பற்றி பேசுகிறார்கள். அப்போது கோபி, நான் 4,5 வருடம் ஜெயிலுக்குப் போய் விடுவேனா? குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள் என்றெல்லாம் ரொம்ப எமோஷனலாக பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்கு ராதிகா, அப்படியெல்லாம் நடக்காது. நான் பெரிய லாயரிடம் பேசி இருக்கிறேன். நான் பார்த்துக்கொள்கிறேன், பயப்படாதீர்கள் என்று ஆறுதல் சொல்கிறார். மறுநாள் காலையில் கோர்ட்டுக்கு கிளம்ப பாக்கியா தயாராக இருக்கிறார். ஈஸ்வரி, கடவுளிடம் தன் மகனுக்காக வேண்டிக்கொள்கிறார். பின் கோபியை பார்த்து ரொம்ப எமோஷனலாக அழுது புலம்புகிறார். பாக்கியா எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பின்கோர்ட்டில் பாக்கியாவின் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.