விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் எழில் பட விழா முடிந்தவுடன் எல்லோருமே போட்டோ எடுதார்கள். அப்போது ராதிகாவை இனியா கூப்பிட்டார். ஆனால், அவர் வரவில்லை. இதை எல்லாம் பார்த்து கோபிக்கு சங்கடமாக இருந்தது. அதன் பின் இனியா, தன்னுடைய நண்பருடன் ரெஸ்டாரண்டில் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அவர்கள் இருவருமே காதலிப்பது போல தான் தெரிந்தது. இன்னொரு பக்கம் மறு திருமணம் பற்றி செல்வி, ராதிகா-பாக்கியாவிடம் கேட்க, அவர்கள் கிண்டலாக பதில் அளித்தார்கள். பின் மூவருமே ரொம்ப சந்தோசமாக பேசி இருந்தார்கள்.
கோர்ட்டில் கோபி- ராதிகா வழக்கு நடந்தது. அப்போது ராதிகா தரப்பில், இனி சேர்ந்து வாழ விருப்பமில்லை. விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்று சொன்னார். இதை கேட்டவுடன் கோபி ரொம்பவே மனமுடைந்து விட்டார். பின் கோபி இடம் விசாரிக்க, அவருமே சம்மதம் சொல்லி விட்டார். அதற்கு பின் ஜீவனாம்சம் பற்றி கோபி தரப்பு வக்கீல் பேசி இருந்தார். ஆனால், ராதிகா எந்த பணமும் வேண்டாம் என்று சொல்லி விட்டார். கடைசியில் நீதிபதி, இருவருக்குமே விவாகரத்தை கொடுத்து விட்டார். அதற்குப்பின் ராதிகா- பாக்கியா இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள்.
பாக்கியலட்சுமி:
அப்போது பாக்கியா, நீங்கள் இந்த முடிவை எடுப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. இனி என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு ராதிகா, எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் நான் சமாளித்து வந்து விடுவேன். இனி நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை பாருங்கள் என்று சொன்னார். அதற்கு பின் ராதிகா, உங்கள் வீட்டிற்கு அழைத்து போக முடியமா? என்று கேட்க, கோபி-ராதிகா இருவரும் காரில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கோபி, நான் ரொம்ப அதிர்ஷ்டம் கெட்டவன் என்றார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் கோபி, இதோடு நம் உறவு முடியும் என்று நான் நினைக்கவே இல்லை என்று ரொம்ப எமோஷனலாக கோபி பேசி இருந்தார். இதைக் கேட்டவுடன் ராதிகாவிற்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. உடனே ராதிகா, இதைப்பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் ஈஸ்வரி, கோர்ட்டில் என்ன நடந்ததோ? என்று புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து கோபி-ராதிகா இருவரும் வீட்டிற்கு வந்தவுடன் இனியா- ஈஸ்வரி இருவருமே பயப்பட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
அப்போது ராதிகா, எங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. உங்களை எல்லாம் பார்த்துவிட்டு போக தான் வந்தேன். பயப்பட வேண்டாம். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். எப்பவும் நான் உங்களை என் அம்மாவாக தான் பார்க்கிறேன் என்று சொன்னார். ராதிகா சொல்வதைக் கேட்டு ஈஸ்வரி கண்கலங்கி அழுதார். அதற்குப்பின் இனியா, மயூவிற்காக மேக்கப் கிட் கொடுத்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ராதிகா, எல்லோரிடமும் எமோஷனலாக மன்னிப்பு கேட்டு சந்தோஷமாக பேசுகிறார். ஈஸ்வரியும் ராதிகாவை மன்னித்துவிட்டு அவருக்கு புடவையை பரிசாக கொடுக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் பாக்கியா, மையூவுக்காக சமைத்துக் கொடுக்கிறார். பின் எல்லோரிடமும் சொல்லிவிட்டு மொத்தமாகவே கோபியின் வாழ்க்கை விட்டு ராதிகா சென்று விடுகிறார். இதையெல்லாம் பார்த்து கோபிக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. பின் எமோஷனலாக தன்னுடைய அம்மாவிடம் பேசிவிட்டு செல்கிறார். அதற்கு பின் ஈஸ்வரி, நான் என்னுடைய மகனை சரியாக வளர்த்து இருந்தால் உன்னையே விவாகரத்து செய்திருக்க மாட்டான். என் மீது தான் தவறு என்று சொல்கிறார். அதற்கு பின் எழில் வீட்டிற்கு வருகிறார். அவர் தன் அம்மா, புதிதாக ரெஸ்டாரன்ட் திறப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது