கோபியை நினைத்து புலம்பும் ஈஸ்வரி, சந்தோஷத்தில் பாக்கியா – விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
128
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதை நினைத்து கோபி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். பாக்கியா, ராதிகாவிற்கு ஃபோன் செய்தார். ஆனால், ராதிகா போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் கோபி-பாக்கியா வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் ராதிகா, வேறு ஒரு நம்பரில் இருந்து பாக்கியாவிற்கு போன் செய்து பேசினார். அப்போது பாக்கியா, எதற்காக இந்த முடிவை எடுத்தீர்கள்? என்று கேட்க, நான் சரியாக யோசித்து தான் எடுத்தேன். யாருக்காகவும் கவலைப்படாமல் நீங்கள் உங்கள் வாழ்க்கையை பாருங்கள்.

-விளம்பரம்-

நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன் என்று சொன்னார். உடனே கோபி போனை வாங்கி பேச, ராதிகா ஃபோனை வைத்து விட்டார். நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, கோபியின் நிலைமையை நினைத்து பாக்யாவிடம் புலம்பி கொண்டிருந்தார். உடனே பாக்கியா, முன்னாள் கணவரை நினைத்து வருத்தப்படும் அளவிற்கு நான் நல்லவள் கிடையாது. உங்கள் மகனின் பிரச்சனையை பற்றி யோசிக்கும் அளவிற்கு நேரமில்லை என்று சொன்னார். பின் கோபி விவாகரத்து வழக்குக்காக கோர்ட்டுக்கு கிளம்பி இருந்தார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

ஈஸ்வரி, நானும் வருகிறேன் என்றவுடன் கோபி வேண்டாம் என்று சென்று விட்டார். அதன் பின் ஈஸ்வரி, கோர்ட்டில் என்ன நடக்குமோ? ராதிகாவுடன் கோபி சென்று விடுவானோ? என்றெல்லாம் புலம்பி கொண்டிருந்தார். அதற்கு பாக்கியா, எதுவாக இருந்தாலும் அவர்களுடைய முடிவு. நாம் தலையிட முடியாது. எதைப் பற்றியும் யோசிக்காதீர்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்றார் . இன்னொரு பக்கம் கோர்ட்டில் கோபி, ராதிகாவை சந்தித்து பேசி இருந்தார். அப்போது அவர், நாம் சேர்ந்து வாழலாம். இந்த விவாகரத்து வேண்டாம்.

நேற்று எபிசோட்:

எனக்காக கொஞ்சம் டைம் கொடு என்றெல்லாம் பேச, ராதிகா எதுவுமே பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். நேற்று எபிசோட்டில் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்தது. அப்போது ராதிகா, நான் கோபியுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. விவாகரத்து வேண்டும் என்று சொன்னார். இதை கேட்டவுடன் கோபி ஷாக் ஆனார். பின் நீதிபதி, இருவருக்குமே அவகாசம் கொடுத்தார். அதற்குப்பின் ராதிகா, பாக்கியாவை சந்தித்து பேசி இருந்தார். இருவரும் தங்களின் வாழ்க்கையை நினைத்து பேசிக்கொண்டு இருந்தார்கள். இதை கோபி பார்த்தவுடன் பாக்யாவிற்கு விவாகரத்து கொடுத்ததை நினைத்து வருத்தப்பட்டார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோர்ட்டில் என்ன நடந்ததோ? என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, கோர்ட்டில் நடந்ததை எல்லாம் ஈஸ்வரிடம் சொல்லி ரொம்ப வருத்தப்படுகிறார். ஈஸ்வரியும் கோபிக்கு ஆறுதல் சொல்கிறார். ஆனால், அவரால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ராதிகா செய்தது நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். இது எல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. பின் தன் கணவரின் போட்டோவிற்கு முன்பு கோபி பற்றி ரொம்ப எமோஷனலாக பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் சில மாதங்களுக்கு பிறகு என்று எபிசோடை காண்பிக்கிறார்கள். அப்போது பாக்கியா, அழகாக எழிலுடைய படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தயாராகிறார். குடும்பத்தில் உள்ள எல்லோருமே எழில் படத்தின் விழாவிற்காக தயாராகி கிளம்புகிறார்கள். இனியா, பாக்கியாவிற்கு தெரியாமல் யாருக்கே போனில் மெசேஜ் போடுகிறார். இன்னொரு பக்கம் எழில் தன்னுடைய படத்தின் விழாவிற்காக சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருக்கிறார். அப்போது விழாவிற்கு பாக்கியா குடும்பத்தில் இருந்து ஒவ்வொருவருமே வந்து கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement