விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி, ஹாஸ்பிடலில் இருந்து தன் அம்மா வீட்டிற்கு போவதாக சொன்னார். இதனால் ராதிகா அதிர்ச்சியாகி எதுவும் பேச முடியாமல் இருந்தார். பாக்கியா தடுத்துமே ஈஸ்வரி கேட்கவே இல்லை. பின் ராதிகா, இதெல்லாம் நீங்கள் செய்த வேலை தானே, நடிக்காதீர்கள் என்றெல்லாம் பாக்கியாவை பேசி இருந்தார். பின் வீட்டில் ஈஸ்வரி, கோபிக்கு சாப்பாடு செய்ய சொல்லி ஆர்டர் போட்டார். அதற்கு பாக்யா, என்னால் செய்ய முடியாது. நீங்கள் தானே அழைத்து வந்தீர்கள். உங்கள் மகனை பார்த்துக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார்.
இன்னொரு பக்கம் ராதிகா, கோபி அவர் அம்மா வீட்டிற்கு சென்று விட்டார் என்று சொல்லி கதறி அழுதார். இதனால் கோபத்தில் ராதிகா அம்மா, பாக்கியா வீட்டிற்கு சண்டைக்கு வந்தார். நேற்று எபிசோடில் ராதிகா அம்மா, பாக்யவிடம் சண்டை போட்டார். அப்போது பாக்கியா, எதுவாக இருந்தாலும் கோபி அம்மாவிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் ஈஸ்வரி வெளியே வந்தார். அப்போது ராதிகா அம்மா, கோபியை அனுப்ப சொல்லி கேட்டார். ஆனால், ஈஸ்வரி முடியாது என்றார். பின் இருவருக்கும் இடையே கலவரமே நடந்தது.
பாக்கியலட்சுமி:
கடைசியில் ஈஸ்வரி, கோபியின் விருப்பத்தால் தான் இங்கே வந்திருக்கிறான். வெளியே போ என்று திட்ட, உங்களை இனி சும்மா விட மாட்டேன் என்று ராதிகா அம்மா மிரட்டி விட்டு போனார். இதை எல்லாம் பார்த்த பாக்கியாவிற்கு ஈஸ்வரி மீது பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் ராதிகா அம்மா, பாக்கியா வீட்டில் நடந்ததை சொன்னார். இதனால் ராதிகா ரொம்பவே வருத்தப்பட்டும், மயூவின் நிலைமையை நினைத்தும் பேசிக் கொண்டிருந்தார். உடனே அவருடைய அம்மா ஆறுதல் சொல்லி, நான் எப்படியாவது உன்னையும் கோபியும் சேர்த்து வைக்கிறேன் என்றார்.
நேற்று எபிசோட்:
பின் பாக்யா எல்லோருக்கும் சமைத்துக் கொண்டிருந்தார். கோபிக்காக சமைக்க போன ஈஸ்வரிக்கு
கிச்சனில் பொருட்கள் எதுவுமே தெரியவில்லை என்றாலும் ஏதேதோ செய்து கஷ்டப்பட்டு சமைத்து முடித்தார். பின் சாப்பிட வந்த கோபி, பாக்யாவை பார்த்து சிரித்தார். ஆனால், பாக்யா அவரை முறைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு போனார். சாப்பிட்டு முடித்துவிட்டு ஈஸ்வரி,இனியா, கோபி, செழியன் ஆகிய நான்கு பேரும் கலகலப்பாக சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், கோபி தான் செய்த தவறை உணர்ந்து தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு பேசிக்கொண்டு இருக்கிறார். அதற்கு ஈஸ்வரி, கோபிக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கிறார். பின் பாக்கியா, ஈஸ்வரிக்கு மட்டும் காபி கொண்டு வந்து தந்தார். உடனே ஈஸ்வரி, தன்னுடைய மகனுக்காக காபி ரெடி பண்ணி கொண்டு வந்து தருகிறார். அப்போது பாக்கியா பம்பரமாக வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து கோபி ஆச்சரியப்பட்டு தன்னுடைய அம்மாவிடம் கேட்க, அவருமே பாக்கியாவை புகழ்ந்து பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
மறுநாள் கோபியை பார்ப்பதற்காக ராதிகா வந்தார். அப்போது ஈஸ்வரி, அவரை தடுத்து நிறுத்தி சண்டை போடுகிறார். உடனே பாக்யா, ஈஸ்வரி கையைப் பிடித்துக் கொண்டு, நீங்கள் உள்ளே போங்க என்று அனுப்பி வைக்கிறார். ஆனால், கோபி தூங்கிக் கொண்டிருப்பதால் ராதிகா எதுவும் பேசாமல் கிளம்பி விடுகிறார். அதற்குப்பின் தூங்கி எழுந்த கோபி தண்ணி கேட்கிறார். ஆனால், ஈஸ்வரி தண்ணி கொடுக்காமல் பாக்கியா- கோபியை சேர்த்து வைப்பதற்காக தேவையில்லாத வேலைகளை செய்கிறார்.இதை கவனித்த செல்வி பாக்யாவிடம் சொல்ல, அவர் கோபப்பட்டு பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.