இனியா சொன்ன வார்த்தையால் பொங்கி எழுந்த ராதிகா, கோபிக்கு ஏற்பட்ட விபரீதம் – பாக்கியலட்சுமி

0
235
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியா, கோபியின் சுயரூபத்தை தெரிந்தும் செழியன்- இனியாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஈஸ்வரியும் பாக்கியாவை தான் திட்டி இருந்தார். ஆனால், பாக்யா தன் முடிவில் இருந்து மாறவில்லை. பின் ஜாமினில் வெளியே வந்த கோபி பாக்கியலட்சுமி வீட்டிற்கு போய் சண்டை போட்டார். பாக்யாவும் பதிலுக்கு பதில் பேசி இருந்தார். இதையெல்லாம் அக்கம் பக்கத்தினர் எல்லோருமே வேடிக்கை பார்த்து மொபைலிலும் வீடியோ எடுத்து வெளியிட்டார்கள்.

-விளம்பரம்-

பின் பாக்கியா- கோபி சண்டை போட்ட வீடியோவை பார்த்த ராதிகா ஷாக் ஆகி கோபியிடம் சண்டை போட்டார். இன்னொரு பக்கம் கல்லூரியில் அந்த வீடியோவால் இனியாவை எல்லோரும் கிண்டல் கேலி செய்தார்கள். இதனால் இனியா ரொம்ப வருத்தப்பட்டு தன்னுடைய அம்மாவிடம் பேசி புலம்பி இருந்தார். பின் கோபி வீட்டிற்கு போன இனியாவை, ராதிகா அம்மா வம்பிழுத்தார். கோபத்தில் இனியா, உங்களால் தான் எங்கள் வீட்டில் நிம்மதி இல்லை என்று ராதிகாவிடம் சண்டை போட்டார். இதனால் ராதிகா ரொம்ப மனம் உடைந்து விட்டார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

பின் கோபி, இனியாவை தனியாக அழைத்துக் கொண்டு போனார். அப்போது இனியா, உங்கள் வீடியோ எல்லாம் பார்த்து எல்லோருமே கேள்வி கேட்டார்கள் என்று அழுதார். உங்கள் இருவர் சண்டையில் எங்களுடைய வாழ்க்கை தான் பாதிக்கப்படுகிறது. நீங்கள் ஏன் அம்மாவை பழிவாங்க இப்படி எல்லாம் செய்தீர்கள்? அம்மா பாவம். நீங்கள் தான் வாழ்க்கை பிடிக்கவில்லை என்று அம்மாவை பாதியிலேயே விட்டுட்டு போனீர்கள். இருந்தாலும், அவர்கள் எங்களுக்காக உழைக்கிறார்கள்.

நேற்று எபிசோட்:

அப்படி இருந்தும் அவர்களுக்கு ஏன் தொந்தரவு கொடுக்கிறீர்கள். தாத்தாவின் கடைசி ஆசையை தான் அம்மா செய்தாங்க. அவர்கள் உங்களை பழிவாங்கவில்லை. அவர் வேலையை தான் செய்கிறார். நீங்கள் ஏன் இப்படி எல்லாம் செய்கிறீர்கள்? உங்களுக்கு பிடித்ததை தான் நீங்கள் செய்கிறீர்கள். அம்மாவை அழிக்கிறேன் என்று எங்களுடைய வாழ்க்கையும் அழிக்கிறீர்கள் என்று ரொம்ப எமோஷனலாக இனியா அழுது பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு கோபி மனம் உடைந்து விட்டார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

அந்த சமயம் பார்த்து இனியாவிற்கு பாக்கியா போன் செய்ய, கோபி எடுத்து பேசி இருந்தார். உடனே பாக்கியா, போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கேஸை வாபஸ் வாங்க சொல்லி கேட்க, பாக்கியா முடியாது என்று உறுதியாக இருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், இனியா பேசிய வார்த்தையால் கோபி ரொம்பவே மனமடைந்து இருக்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த கோபி, ராதிகாவிடம் எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளே போகிறார். உடனே ராதிகா, பிள்ளைகள் மட்டும் தான் ரொம்ப முக்கியம். எதற்கு உங்களை திருமணம் செய்தேன் என்று தெரியவில்லை? உங்களால் என் வாழ்க்கை போனது என்று கத்தி சண்டை போடுகிறார்.

சீரியல் ட்ராக்:

கோபியும் பதிலுக்கு பதில் கொடுத்தார். ஒரு கட்டத்தில் கோபி, உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி இருக்கிறது என்று பேச, நிம்மதியில்லை என்றால் வெளியே போங்க என்று ராதிகா சொல்கிறார். ஆத்திரத்தில் கோபியும் வெளியே வந்து விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் இனியாவிற்கு பாக்யா ஆறுதல் சொல்கிறார். இனியாவுமே தன் அம்மாவிற்கு சப்போர்ட்டாக பேசுகிறார். கடைசியில் கோபி வண்டியில் வந்து கொண்டிருக்கும் போது நெஞ்சுவலி வருகிறது. அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டு ராதிகாவிற்கு போன் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement