பாக்கியாவின் புது ஆர்டருக்கு கோபி கொடுத்த ஐடியா, ராதிகா நிலைமை என்ன? பாக்கியலட்சுமி

0
149
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி, ஹாஸ்பிடலில் இருந்து தன் அம்மா வீட்டிற்கு போவதாக சொன்னார். இதனால் ராதிகா அதிர்ச்சியாகி எதுவும் பேச முடியாமல் இருந்தார். பாக்கியா தடுத்துமே ஈஸ்வரி கேட்கவே இல்லை. இன்னொரு பக்கம் ராதிகா, கோபி அவர் அம்மா வீட்டிற்கு சென்று விட்டார் என்று சொல்லி கதறி அழுதார். இதனால் கோபத்தில் ராதிகா அம்மா, பாக்கியா வீட்டில் சண்டை போட்டார். அப்போது ஈஸ்வரி-ராதிகா அம்மா இருவருக்கும் இடையே கலவரமே நடந்தது.

-விளம்பரம்-

கடைசியில் ஈஸ்வரி, கோபியின் விருப்பத்தால் தான் இங்கே வந்திருக்கிறான். வெளியே போ என்று திட்ட, உங்களை இனி சும்மா விட மாட்டேன் என்று ராதிகா அம்மா மிரட்டி விட்டு போனார். பின் ராதிகா அம்மா, பாக்கியா வீட்டில் நடந்ததை சொல்ல, ராதிகா ரொம்பவே வருத்தப்பட்டும், மயூவின் நிலைமையை நினைத்தும் பேசிக் கொண்டிருந்தார். உடனே அவருடைய அம்மா ஆறுதல் சொல்லி, நான் எப்படியாவது உன்னையும் கோபியும் சேர்த்து வைக்கிறேன் என்றார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

பின் கோபிக்காக சமைக்க போன ஈஸ்வரிக்கு கிச்சனில் பொருட்கள் எதுவுமே தெரியவில்லை என்றாலும் ஏதேதோ செய்து கஷ்டப்பட்டு சமைத்து முடித்தார். பின் சாப்பிட வந்த கோபி, பாக்யாவை பார்த்து சிரித்தார். ஆனால், பாக்யா அவரை முறைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு போனார். சாப்பிட்டு முடித்துவிட்டு ஈஸ்வரி, இனியா, கோபி, செழியன் ஆகிய நான்கு பேரும் கலகலப்பாக சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் கோபி, தான் செய்த தவறை உணர்ந்து தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு பேசிக்கொண்டு இருந்தார். அதற்கு ஈஸ்வரி, ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். பின் பாக்கியா, ஈஸ்வரிக்கு மட்டும் காபி கொண்டு வந்து தந்தார். உடனே ஈஸ்வரி, தன்னுடைய மகனுக்காக காபி ரெடி பண்ணி கொடுத்தார். அப்போது பாக்கியா பம்பரமாக வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து கோபி ஆச்சரியப்பட்டு தன்னுடைய அம்மாவிடம் கேட்க, அவருமே பாக்கியாவை புகழ்ந்து பேசி இருந்தார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

மறுநாள் கோபியை பார்க்க வந்த ராதிகாவை உள்ளே விடாமல் ஈஸ்வரி தடுத்தார். உடனே பாக்யா, ஈஸ்வரி கையைப் பிடித்துக் கொண்டு, நீங்கள் உள்ளே போங்க என்று ராதிகாவை அனுப்பி வைத்தார். ஆனால், கோபி தூங்கிக் கொண்டிருந்ததால் ராதிகா எதுவும் பேசாமல் கிளம்பி விட்டார். அதற்குப்பின் தூங்கி எழுந்த கோபி தண்ணி கேட்டார். ஆனால், பாக்கியா- கோபியை சேர்த்து வைப்பதற்காக தேவையில்லாத வேலைகளை ஈஸ்வரி செய்தார். இதை கவனித்த செல்வி பாக்யாவிடம் சொல்ல, அவர் கோபப்பட்டு பேசி இருந்தார்.

சீரியல் ட்ராக்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் கோபியை விழுந்து விழுந்து ஈஸ்வரி கவனித்துக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து ஜெனிக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் கோபி, நான் ராதிகா வீட்டிற்கு போகிறேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரி கோபப்பட்டு திட்டி இருக்கிறார். இன்னொரு பக்கம் ராதிகா, கோபி போன் பண்ணுவார் என்று எதிர்பார்த்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அதன் பின் தனக்கு கிடைத்த ஆர்டரை பற்றி பாக்கியா பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது புது மெனு கார்டு வந்ததால் என்ன செய்வது என்று புரியாமல் புலம்பி இருந்தார். உடனே கோபி, அதற்கான ஒரு செஃப்பை வைத்து சமைத்துக் கொள்ளலாம் என்றவுடன் பாக்யா அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement