ராதிகா சொன்ன வார்த்தையால் நொறுங்கி போன கோபி, பாக்கியா செய்த அட்வைஸ் – பாக்கியலட்சுமி

0
144
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் எழில் படத்தின் விழாவிற்கு பாக்கியா வந்தார். அவரைப் பார்த்தவுடன் எழில் ரொம்ப சந்தோஷப்பட்டார். அப்போது பாக்கியா, ராதிகாவையும் இந்த விழாவிற்கு வர வைத்திருந்தார். ராதிகாவை பார்த்தவுடன் எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள். அதற்குப்பின் படத்தின் விழா நல்லபடியாக தொடங்கி இருந்தது. எழில், தன்னுடைய குடும்பத்தை பற்றி ரொம்ப பெருமையாக பேசி இருந்தார்.

-விளம்பரம்-

அதற்குப்பின் ராதிகா எல்லோரிடம் பேசிக் கொண்டிருந்தார். கோபி, ராதிகாவிடம் பேச முயற்சித்தார்.
நேற்று எபிசோட்டில் கோபி, ராதிகாவிடம் பேசி இருந்தார். உடனே ராதிகா, நீங்கள் பழைய விஷயத்தை மீண்டும் பேச வேண்டாம். எழிலின் படவிழாவை சந்தோஷமாக என்ஜாய் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். ஈஸ்வரி, எதற்காக ராதிகாவை இங்கு வர வைத்தாய்? பிரச்சனை செய்ய வேண்டும் என்று இதையெல்லாம் செய்கிறாயா? என்று பாக்கியாவை திட்டிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

இதை பார்த்த ராதிகா, ஈஸ்வரியிடம் பேச வந்தார். அப்போது ராதிகா, நான் எந்த பிரச்சனையும் செய்ய வரவில்லை. பாக்கியா சொன்னதால் தான் எழிலின் பட விழாவிற்கு வந்தேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் கிளம்பி விடுவேன் என்று சொன்னவுடன் ஈஸ்வரி அமைதியாக இருந்தார். பின் பட விழா முடிந்தவுடன் எல்லோருமே போட்டோ எடுதார்கள். அப்போது ராதிகாவை இனியா கூப்பிட்டார். ஆனால், அவர் வரவில்லை. இதை எல்லாம் பார்த்து கோபிக்கு சங்கடமாக இருந்தது. அதன் பின் இனியா, தன்னுடைய நண்பருடன் ரெஸ்டாரண்டில் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அவர்கள் இருவருமே காதலிப்பது போல தான் தெரிந்தது.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் பாக்கியா, ராதிகா, செல்வி மூவருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மறு திருமணம் பற்றி செல்வி, ராதிகா-பாக்கியாவிடம் கேட்க, அவர்கள் கிண்டலாக பதில் அளித்தார்கள். பின் மூவருமே ரொம்ப சந்தோசமாக பேசி இருந்தார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் கோபி- ராதிகா வழக்கு நடக்கிறது. அப்போது ராதிகா தரப்பில், இனி சேர்ந்து வாழ விருப்பமில்லை. விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்று சொல்கிறார்கள். இதை கேட்டவுடன் கோபி ரொம்பவே மனமுடைந்து விடுகிறார். பின் கோபி இடம் விசாரிக்க, அவருமே சம்மதம் சொல்லி விடுகிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

அதற்கு பின் ஜீவனாம்சம் பற்றி கோபி தரப்பு வக்கீல் பேசுகிறார். ஆனால், ராதிகா எந்த பணமும் வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். கடைசியில் நீதிபதி, இருவருக்குமே விவாகரத்தை கொடுத்து விடுகிறார். அதற்குப்பின் ராதிகா- பாக்கியா இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாக்கியா, நீங்கள் இந்த முடிவை எடுப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. இனி என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு ராதிகா, எனக்கு தெரியவில்லை. கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் நான் சமாளித்து வந்து விடுவேன். என்னுடைய மகளின் வாழ்க்கையை பார்க்கணும்.

சீரியல் ட்ராக்:

இனி நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை பாருங்கள் என்று சொல்கிறார். பின் பாக்கியா கிளம்பி விடுகிறார். அதற்குப்பின் கோபி, உனக்கு எதுவும் வேண்டாமா? என்று கேட்கிறார். அதற்கு ராதிகா, உங்கள் வீட்டிற்கு அழைத்து போக முடியமா? என்று சொல்கிறார். பின் இருவரும் காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கோபி, நான் ரொம்ப அதிர்ஷ்டம் கெட்டவன் என்று ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். ஆனால், ராதிகா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement