ராதிகா சொன்னதை கேட்டு ஷாக்கான கோபி, கோர்ட்டுக்கு வந்த பாக்கியா – பாக்கியலட்சுமி

0
144
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதை நினைத்து கோபி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது வந்த ஈஸ்வரி, ராதிகாவை மறந்துவிடு. உன்னுடைய குடும்பத்தை பார். அவள் உன் வாழ்க்கையில் இல்லை என்றெல்லாம் அவருடைய மனதை மாற்ற பார்த்தார். ஆனால், கோபி அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பின் கோபி, ராதிகாவை பார்க்க வீட்டிற்கு போனார். அந்த வீட்டையும் ராதிகா காலி செய்து விட்டார். அப்போது பாக்கியாவும் ராதிகாவை பார்க்க வந்தார்.

-விளம்பரம்-

உடனே பாக்கியா, ராதிகாவிற்கு ஃபோன் செய்தார். ஆனால், ராதிகா போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் கோபி-பாக்கியா வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் ராதிகா, வேறு ஒரு நம்பரில் இருந்து பாக்கியாவிற்கு போன் செய்து பேசினார். அப்போது பாக்கியா, எதற்காக இந்த முடிவை எடுத்தீர்கள்? என்று கேட்க, நான் சரியாக யோசித்து தான் எடுத்தேன். யாருக்காகவும் கவலைப்படாமல் நீங்கள் உங்கள் வாழ்க்கையை பாருங்கள். நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன் என்று சொன்னார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

உடனே கோபி போனை வாங்கி பேச, ராதிகா ஃபோனை வைத்து விட்டார். நேற்று எபிசோட்டில் ஈஸ்வரி, கோபியின் நிலைமையை நினைத்து பாக்யாவிடம் புலம்பி கொண்டிருந்தார். உடனே பாக்கியா, முன்னாள் கணவரை நினைத்து வருத்தப்படும் அளவிற்கு நான் நல்லவள் கிடையாது. உங்கள் மகனின் பிரச்சனையை பற்றி யோசிக்கும் அளவிற்கு நேரமில்லை என்று சொன்னார். பின் கோபி விவாகரத்து வழக்குக்காக கோர்ட்டுக்கு கிளம்பி இருந்தார். ஈஸ்வரி, நானும் வருகிறேன் என்றவுடன் கோபி வேண்டாம் என்று சென்று விட்டார்.

கடந்த வாரம் எபிசோட்:

அதன் பின் ஈஸ்வரி, கோர்ட்டில் என்ன நடக்குமோ? ராதிகாவுடன் கோபி சென்று விடுவானோ? என்றெல்லாம் புலம்பி கொண்டிருந்தார். அதற்கு பாக்கியா, எதுவாக இருந்தாலும் அவர்களுடைய முடிவு. நாம் தலையிட முடியாது. எதைப் பற்றியும் யோசிக்காதீர்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்றார் . இன்னொரு பக்கம் கோர்ட்டில் கோபி, ராதிகாவை சந்தித்து பேசி இருந்தார். அப்போது அவர், நாம் சேர்ந்து வாழலாம். இந்த விவாகரத்து வேண்டாம். எனக்காக கொஞ்சம் டைம் கொடு என்றெல்லாம் பேச, ராதிகா எதுவுமே பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடக்கிறது. அப்போது ராதிகா, நான் கோபியுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. விவாகரத்து வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் கோபி ஷாக் ஆகிறார். பின் நீதிபதி, கோபி இடம் விசாரிக்கிறார். ஆனால், கோபிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உடனே நீதிபதி, இருவருக்குமே அவகாசம் கொடுக்கிறார். அதற்கு பின் கோபி, ரொம்பவே எமோஷனலாக ராதிகாவிடம் பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

ராதிகா, எதற்குமே செவிசார்க்கவில்லை. இனி சேர்ந்து வாழ விருப்பமில்லை. சீக்கிரமாக எனக்கு விவாகரத்து கொடுங்கள் என்று சொல்லி விடுகிறார். அதற்குப்பின் ராதிகா, பாக்கியாவை சந்தித்து பேசுகிறார். இருவரும் தங்களின் வாழ்க்கையை நினைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதை கோபி பார்த்தவுடன் பாக்யாவிற்கு விவாகரத்து கொடுத்ததை நினைத்து வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, கோர்ட்டில் என்ன நடந்ததோ? என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement