விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் சமையல் ஆர்டருக்கான வேலைகள் மும்முரமாக நடந்தது. கோபியும் பாக்யாவிற்கு உதவியாக சமையல் செய்து இருந்தார். பரபரப்பாக பாக்கியா வேலை செய்வதை பார்த்து கோபி ஆச்சரியப்பட்டார். பின் பாக்கியா, நல்லபடியாக தன்னுடைய சமையல் ஆர்டரை செய்து முடித்து விட்டார். கோபி, பாக்கியாவின் திறமையை பாராட்டி பேசிருந்தார். அதற்கு அவர் நன்றி சொன்னார். அதற்கு பின் வீட்டில் ஈஸ்வரி, ராதிகாவை வெறுப்பு ஏற்றுவது போல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஈஸ்வரி, நீ என் மகனை விட்டு சென்றுவிடு. கோபி- பாக்கியா இருவருமே சேர்ந்து விடுவார்கள். நீ அவனை விவாகரத்து செய்துவிடு என்றெல்லாம் சொன்னார்.
இதனால் கோபப்பட்ட ராதிகா, ஈஸ்வரியை பயங்கரமாக திட்டி இருந்தார். ராதிகா பேசிய பேச்சால் ஈஸ்வரியால் வாயை திறக்க முடியவில்லை. அதற்குப்பின் பாக்கியா, கோபி உதவி செய்ததற்கு பணம் கொடுத்து விட்டு, நீங்கள் இன்னும் இந்த வீட்டில் தங்குவதற்கு இரண்டு நாளைக்கு தான் வாடகை கொடுத்து இருக்கிறீர்கள். எப்போது காலி செய்வீர்கள்? என்று கேட்டதற்கு ராதிகா, ரெண்டு நாளில் காலி செய்து விடுவோம் என்று சொன்னவுடன் ஈஸ்வரி- இனியா பதறி போனார்கள். கோபிக்கும் இந்த வீட்டை விட்டு கிளம்ப விருப்பமில்லை. இதைப் பற்றி ராதிகாவிடம் பேசி இருந்தார்கள்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் ராதிகா, என்னால் இனி இந்த வீட்டில் இருக்க முடியாது. நாம் இரண்டு நாளில் கிளம்பி விடலாம் என்று சொன்னார். உடனே கோபி, என்னுடைய அம்மா ,குழந்தைகளை விட்டு வர முடியாது. இங்கே தான் இருக்கணும். நீயும் எங்கேயும் போகக்கூடாது. எனக்கு எல்லாரும் இருக்கணும் என்று சொன்னார். ஆனால், ராதிகா ஏற்றுக்கொள்ளவே இல்லை. இருவருக்கும் இடையே வாக்குவாதம் தான் வந்தது. மறுநாள் காலையில் இனியா காம்பிடிஷனுக்காக கோபி, மயூ- ராதிகா இருவரையும் அழைத்தார். ஆனால், இருவருமே வர முடியாது என்று சொன்னார்கள்.
நேற்று எபிசோட்:
ராதிகாவை விடாமல் கட்டாயப்படுத்தி அழைத்துக் கொண்டு போனார் கோபி. பின் கல்லூரியில் இனியாவின் பெற்றோர்களை மேடைக்கு அழைக்க, பாக்கியா போனார். அதே போல் கோபி, ராதிகாவையும் மேடைக்கு அழைத்தார். ஆனால், ராதிகா வர முடியாது என்று மறுத்துமே கோபி விடாமல் அவரை அழைத்துக்கொண்டு போனார். மூன்று பேரும் மேடையில் இருப்பதை பார்த்து எல்லோருமே இனியாவை கிண்டல் கேலி செய்தார்கள். அதனால் அவர் ரொம்ப அவமானப்பட்டார். கோபிக்கு ஒன்னுமே புரியவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் அவமானத்தில் இனியாவால் எதுவுமே பேச முடியவில்லை. அவரின் நண்பர்கள், ஆசிரியர்கள், விழாக்கு வந்த எல்லோருமே இனியாவையும் அவருடைய குடும்பத்தையும் கேலி கிண்டல் செய்கிறார்கள். இதனால் அவர் ரொம்பவே மனமடைந்து விடுகிறார். பாக்யா அவருக்கு ஆறுதல் சொல்கிறார். இருந்தாலுமே இனியாவால் கவனம் செலுத்தி நடனம் ஆட வில்லை. தனக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைத்து கொண்டு இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் போட்டியில் இனியாவுக்கு மூன்றாம் பரிசு தான் கிடைத்தது. கோபத்தில் இனியா ரொம்பவே கத்துகிறார். அப்போது அவர், உங்களால் தான் நான் தோற்றேன். நீங்கள் எங்களுடைய வாழ்க்கையில் வந்த பிறகுதான் எல்லா பிரச்சினையும் என்று ரொம்ப மோசமாக ராதிகாவை பேசி விடுகிறார். ஆனால், எதுவுமே பேசாமல் வேதனையில் ராதிகா அங்கிருந்து கிளம்பி விடுகிறார். உடனே பாக்கியா, அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தது உன் அப்பா தான். எல்லா பிரச்சனைக்கும் காரணம் அவர்தான் என்று இனியாவிடம் சொல்லி, கோபியை கேள்வி கேட்கிறார். அவரால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.