காதலிக்க தொடங்கும் பழனிச்சாமி, காதலை ஏற்பாரா பாக்கியா? விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி சீரியல்

0
153
- Advertisement -

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் என்றால் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று பிசியாக சுற்றி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் செழியனின் உண்மை முகத்தை அறிந்து ஜெனி வீட்டை விட்டு வெளியேறி விவாகரத்து கொடுக்கிறார். பின் செழியன் மனம் மாறி ஜெனி உடன் சேர்ந்து வாழ நினைக்கிறார். இன்னொரு பக்கம், அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் வருகிறார். அமிர்தாவையும் தன் குழந்தையும் கையோடு அழைத்துச் செல்ல கணேஷ் முயற்சிக்கிறார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

கணேஷ் உடன் செல்ல அமிர்தா மறுக்கிறார். ஒரு வழியாக அமிர்தாவை கணேஷிடம் இருந்து எழில் காப்பாற்றி விடுகிறார். இன்னொரு பக்கம் கோபி தன்னுடைய அலுவலகத்தை இழுத்து மூடின விஷயம் ராதிகாவிற்கு தெரிய வருகிறது. இதை வீட்டில் உள்ள எல்லோரிடமும் ராதிகா சொல்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி ஆகி விடுகிறார்கள். இருந்தாலும், கோபிக்கு எல்லோரும் ஆறுதல் கூறி இருக்கிறார்கள்.
பின் பாக்கியா ரெஸ்டாரண்ட் திறக்கிறார். இதை பார்த்து கோபி வயிறு எரிகிறார். எல்லோரும் ரெஸ்டாரன்ட் திறந்த சந்தோத்தில் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் கதை:

பின் கோபியும் பாக்கியாவிற்கு போட்டியாக ரெஸ்ட்ராண்ட் திறக்கிறார். கோபி ஹோட்டலில் வியாபாரம் நன்றாக நடக்கிறது. ஆனால், பாக்கியா ஹோட்டலில் எதிர்பார்த்த அளவிற்கு வியபாரம் நடக்கவில்லை. பின் பல போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக ஜெனி- செழியன் இருவரும் சந்தித்து பேசி சேர்ந்து விடுகிறார்கள். ஜெனியும் பாக்கியா வீட்டிற்கு வந்து விடுகிறார். வழக்கம்போல் கோபி- பாக்கியா இடையே ரெஸ்டாரண்ட் சண்டைதான் நடந்து கொண்டிருக்கின்றது. நேற்றைய எபிசோட்டில் பழனிசாமிக்கு பிறந்தநாள் என்பதால் அவருடைய வீட்டிற்கு பாக்கிய குடும்பத்தினர் அனைவருமே வருகிறார்கள்.

நேற்று எபிசோட்:

அப்போது பழனிசாமியின் அம்மா, பாக்யாவை திருமணம் செய்து வைப்பது குறித்து தன்னுடைய மகளிடம் பேசுகிறார். அவர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். விழாவில் பழனிசாமிடம், உங்களுக்கு எப்படிப்பட்ட மனைவி வேண்டும் என்று கேட்கும் போது அவர் ஒவ்வொன்னும் சொல்லும் போதும் அதை பாக்கியா செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து பழணிசாமிக்கு பாக்யா மீது காதல் ஏற்படுகிறது. அதோட எபிசோடு முடிவடைகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில், தன்னுடைய பிறந்தநாள் விழாவிற்காக சமைத்துக் கொடுத்ததற்கு பணம் கொடுப்பதற்காக பழனிசாமி பாக்கியவை சந்திக்க வருகிறார்.

சீரியல் ப்ரோமோ:

அப்போது பாக்கியா, அன்பிற்கு விலை பேசணுமா? இது அன்புக்காக செய்தது என்று சொல்லி பணத்தை வாங்க மறுக்கிறார். அவர் சொன்னதைக் கேட்டு சந்தோஷத்தில் மெய்மறந்து பழனிசாமி கார் ஓட்டிக்கொண்டு வருகிறார். டிராபிக் ரூல்ஸ் மீறி அவர் வந்து கொண்டிருக்கிறார். இதனால் இவரை டிராபிக் போலீஸ் வழிமறித்து ஃபைன் போடுகிறார்கள். ஆனால், அவர்கள் சொன்னதையே கேட்காமல் பழனிசாமி தல் நினைவில் இருக்கிறார். பின் போலீஸ் 500 ரூபாய் அபராதம் கட்ட சொன்னதற்கு அன்பிற்கு விலை கொடுக்கணுமா? என்று பழனிசாமி கேட்கிறார். இனிவரும் நாட்களில் பழனிசாமி தன்னுடைய காதலை பாக்யாவிடம் சொல்வாரா? இருவருக்கும் திருமணம் நடக்குமா? இதை பாக்கியா குடும்பத்தார் ஏற்றுக்கொள்வார்களா? போன்ற பரபரப்பான கட்டங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement