செழியனின் சுய ரூபத்தை போட்டு உடைத்த மாலினி, அதிர்ச்சியில் ஜெனி- பரபரப்பான உச்சகட்டத்தில் பாக்கியலட்சுமி சீரியல்

0
251
- Advertisement -

விறுவிறுப்பான கட்டத்தில் செல்லும் பாக்கியலட்சுமி சீரியல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

சீரியலில் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கேண்டினில் சில பிரச்சினை வந்ததால் இங்கிலீஷ் கிளாசை விட்டு விலகுகிறார் பாக்கியா. அதன் பின் ராதிகா கேண்டின் ஆர்டரை கேன்சல் செய்து விடுகிறார். இதனால் பாக்கியா மனம் நொந்து போராடி வேறு ஏதாவது கேண்டின் ஆர்டர் கிடைக்க கடுமையாக உழைக்கிறார். இன்னொரு பக்கம் அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் வருகிறார். அமிர்தாவையும் தன் குழந்தையும் கையோடு அழைத்துச் செல்ல கணேஷ் முயற்சிக்கிறார்.

சீரியலின் கதை:

இந்த உண்மையை கணேஷ் அப்பா, அம்மா பாக்யாவிடம் சொல்கிறார்கள். பாக்கியாவும் என்ன செய்வது என்று புரியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார். இன்னொரு பக்கம், செழியன் தான் செய்த தவறை உணர்ந்து ஜெனி இடமும், குழந்தை இடமும் அன்பாக நடக்கிறார். ஆனால், செழியினை எப்படியாவது அடைய வேண்டும் என்று மாலினி நினைக்கிறார். பின் கோபி உடல் நிலை சரியில்லை என்று தெரிந்தவுடன ஈஸ்வரி, கோபியை தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதனால் கோபம் அடைந்த ராதிகா பாக்கியா வீட்டிற்கு மீண்டும் வந்து விடுகிறார்.

-விளம்பரம்-

மாலினி-செழியன் உறவு:

என்ன செய்வது என்று புரியாமல் மொத்த குடும்பமும் திகைத்து நிற்கிறது. இப்படி இருக்கும் நிலையில் செழியனை மாலினி அவரை தொந்தரவு செய்கிறார். ஒரு கட்டத்தில் டார்ச்சர் தாங்க முடியாமல் செழியன் எல்லா உண்மையும் அவருடைய அம்மா பாக்யாவிடம் சொல்லி விடுகிறார். பின் மாலினியை நேரில் சந்தித்து எல்லாத்தையும் சொல்லி புரிய வைக்கிறார் பாக்கியா. ஆனால், மாலினி, என்னை செழியன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நான் சும்மா விடமாட்டேன் என்று கொந்தளித்து செல்கிறார்.

ஜெனி எடுக்கும் முடிவு:

பின் நேரடியாகவே என்று பாக்கியா வீட்டிற்கு எல்லா உண்மையும் மாலினி சொல்கிறார். முதலில் எல்லோரும் மறுக்கிறார்கள். பின் தன்னிடம் இருந்த போன் ஆதாரத்தை மாலினி காண்பித்தவுடன் எல்லோருக்குமே அதிர்ச்சியாகி விடுகிறது. அது மட்டும் இல்லாமல் மாலினி, இந்த உண்மை எல்லாம் பாக்கியாவிற்கும் தெரியும் என்று சொன்னவுடன் ஜெனி என்ன செய்வது என்று புரியாமல் அதிர்ச்சியாகி விடுகிறார். இனி வரும் காலங்களில் ஜெனி என்ன முடிவெடுக்கப் போகிறார்? செழியனை மன்னிப்பாரா? பாக்கியா நிலைமை ஜெனிக்கு புரிய வருமா? மாலினி என்ன செய்யப் போகிறார்? என்ற அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement