விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியா, இனியா-மையூ இருவரையும் சமாதானம் செய்து ஈஸ்வரிக்கு புத்திமதி சொன்னார். ஆனால், ஈஸ்வரி கேட்கவில்லை. இதை பார்த்து கோபி, பாக்கியாவை பாராட்டி இருந்தார். அதற்குப்பின் கோபி வெளியே கிளம்ப, செழியனை அழைக்க போனார் ஈஸ்வரி. அதற்குள் ராதிகா போகலாம் என்று கோபியை அழைத்து சென்று விட்டார். இதனால் ஆத்திரத்தில் ஈஸ்வரி, ராதிகாவிடம் சண்டை வாங்க காத்துக் கொண்டிருந்தார். அப்போது எழில்- அமிர்தா இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். பின் ராதிகா-கோபியும் வீட்டிற்கு வருகிறார்கள். ஈஸ்வரி, கோபியிடம் கேள்வி கேட்க, ராதிகா பதிலடி கொடுத்தார்.
அந்த சமயம் பார்த்து கோபிக்கு கொரியர் வந்ததது. அதைச் செழியன் வாங்கி பார்த்தார். நேற்று எபிசோட்டில் பாக்கியா தொடர்ந்த வழக்குக்கு கோர்ட்டில் ஆஜராக சொல்லி சம்மன் வந்திருந்தது.
இதை கேட்டவுடன் வீட்டில் எல்லோருமே அதிர்ச்சி ஆனார்கள். கோபத்தில் ஈஸ்வரி, பாக்கியாவிடம் சண்டைக்கு போனார். பின் ஈஸ்வரி, நீ கேசை வாபஸ் வாங்கு. என் மகனை காப்பாற்று. இல்லையென்றால் நடப்பதே வேறு என்றெல்லாம் மிரட்டுவது போல் பேசி இருந்தார். ஆனால், பாக்கியா எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். பின் கோபி, நான் எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறேன்.
பாக்கியலட்சுமி:
நான் செய்தது தவறு தான் என்றார். பின் ராதிகா-கோபி இருவருமே வழக்கு பற்றி பேசி இருந்தார்கள். அப்போது கோபி, நான் 4,5 வருடம் ஜெயிலுக்குப் போய் விடுவேனா? குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள் என்றெல்லாம் ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். அதற்கு ராதிகா, அப்படியெல்லாம் நடக்காது. நான் பெரிய லாயரிடம் பேசி இருக்கிறேன். நான் பார்த்துக்கொள்கிறேன், பயப்படாதீர்கள் என்று ஆறுதல் சொன்னார். மறுநாள் காலையில் கோர்ட்டுக்கு கிளம்ப பாக்கியா தயாராக இருந்தார். ஈஸ்வரி, கடவுளிடம் தன் மகனுக்காக வேண்டிக்கொண்டு, கோபியை பார்த்து ரொம்ப எமோஷனலாக அழுது புலம்பி இருந்தார்.
நேற்று எபிசோட்:
பாக்கியா எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். பின்கோர்ட்டில் பாக்கியாவின் வழக்கு விசாரணைக்கு வந்தது. நேற்று எபிசோட்டில் கோர்ட்டில் கோபியின் வழக்கை விசாரித்தார்கள். அப்போது பாக்கியாவின் லாயர், நாங்கள் கேஸ் வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் என்று சொன்னார். உடனே நீதிபதி, பாக்யாவை திட்டி விட்டு கேசை தள்ளுபடி செய்தார். இதையெல்லாம் கேட்டு ராதிகா- கோபி இருவருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். பின் கோபி ரொம்ப எமோஷனலாக ராதிகா பாக்கியாவிடம் பேசி இருந்தார். ஆனால், அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் பாக்கியா கிளம்பி வந்து விட்டார்.
சீரியல் ட்ராக்:
பின் வீட்டிற்கு வந்த கோபி, கோர்ட்டில் நடந்ததை சொல்ல ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், ஈஸ்வரி, பாக்கியாவை திட்டி இருந்தார். அதற்கு கோபி, பாக்கியா என்னுடைய உயிரையும் மானத்தையும் காப்பாற்றி இருந்தார். அவளை பற்றி எதுவும் பேசாதீர்கள் என்றெல்லாம் புகழ்ந்து பேசி இருந்தார். அதற்குப்பின் ராதிகா, ஈஸ்வரி பேசியதை பற்றி கேட்க, பாக்கியா பெருமையாக தான் பேசி இருந்தார். இது எல்லாம் கேட்டு ஈஸ்வரிக்கு சந்தோசமாக இருந்தது. இருந்தாலும் ராதிகா தன்னை பற்றி பேசியதற்கு கோபப்பட்டு அவரிடம் சண்டைக்கு போனார். அதற்கு ராதிகா, ஈஸ்வரியை எதிர்த்து பேசி மிரட்டி இருந்தார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் தன்னுடைய புதிய ஆர்டருக்காக பாக்யா யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஜெனி, நீங்கள் கோபி அங்கிளிடம் உதவி கேளுங்கள். அது ஒன்னும் தப்பு இல்லை என்று ஐடியா சொல்கிறார். பின் பாக்யா, கோபியிடம் உதவி கேட்கிறார். கோபியும் சந்தோஷமாக சரி என்கிறார். உடனே ஈஸ்வரி, கோபி- பாக்கியாவை சேர்த்து வைக்க பேசுகிறார். ஆனால், பாக்கியா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதை எல்லாம் வெளியே நின்று கேட்ட ராதிகா, கோபப்படுகிறார்.