கோபிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய ராதிகா, அதிர்ச்சியில் பாக்கியா – பாக்கியலட்சுமி

0
153
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி, ராதிகா சொன்ன வார்த்தையை நினைத்து புலம்பி நிலை தெரியாத அளவிற்கு குடித்து இருந்தார். இதை பார்த்தவுடன் ஈஸ்வரி ரொம்பவே வருத்தப்பட்டார். அப்போது கோபி, போதையில் பாக்கியா- ராதிகா இருவரையும் பற்றி உளறிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கேட்ட பாக்கியாவுக்கு கஷ்டமாக இருந்தது. மறுநாள் காலையில் பாக்கியா, ராதிகாவின் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு ராதிகாவின் அம்மா, தன் மகள் வாழ்க்கையை பற்றி வருத்தமாக பாக்யாவிடம் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

பின் பாக்கியா, ராதிகாவிடம் பேசி இருந்தார். அப்போது ராதிகா, நான் சரியாக தான் செய்து இருக்கிறேன் என்று சொல்லி அவருக்கு ஆறுதல் சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் கோபி, போதை தெளிந்து தன் அம்மாவிடம் பேசினார். அப்போது ஈஸ்வரி, போனவளை நினைத்து எங்களை கஷ்டப்பட வைக்காதே. இந்த இரண்டு வருட வாழ்க்கையை மறந்து விட்டு எங்களுடன் சந்தோஷமாக இரு. உன் பிள்ளைகளை பார் என்றெல்லாம் பேசினார். கோபி எதுவும் சொல்லாமல் ராதிகாவை நினைத்து அழுதார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

நேற்று எபிசோட்டில் கோபி, வாழ்க்கையே போனது என்று பயங்கரமாக வருத்தப்பட்டு வேதனையில் இருந்தார். அப்போது வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, கோபி தனியாக உட்கார்ந்து இருந்தார். பாக்கியா, இனியாவை அனுப்பி கோபியை வரவைத்து சாப்பாடு போட்டார். இன்னொரு பக்கம் ராதிகா அம்மா, தன் மகளின் வாழ்க்கை நினைத்து வேதனைப்பட்டு கொண்டிருந்தார். உடனே ராதிகா, நாம் மூவரும் தானே எப்போதும் ஒன்றாக இருந்தோம். தேவையில்லாத விஷயத்தைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்று ஆறுதல் சொன்னார்.

நேற்று எபிசோட்:

பின் மாடியில் கோபி, ராதிகாவின் நினைவுகளை நினைத்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது செழியன் தன் அப்பாவிற்கு ஆறுதல் சொன்னார். அதற்கு கோபி, உங்க அம்மா ரொம்பவே இந்த குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். நாம் தான் பெண்கள் நிலைமையை புரிந்து கொள்வதில்லை என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். அதைக் கேட்டவுடன் செழியன் அழுதார். பின் அவர் தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு வருத்தப்பட்டு பேச, பாக்கியாவும் சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்தார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீண்டும் கோபி ராதிகா வீட்டுக்கு செல்கிறார். ஆனால், அவருடைய அம்மா, ராதிகா- மயூ இருவரும் இங்கில்லை. அவர்கள் எதுவும் சொல்லாமல் எங்கேயோ சென்று விட்டார்கள். எனக்கு கூட தெரியாது என்று சொல்கிறார். ஆனால், அதை கோபி ஏற்காமல் மீண்டும் மீண்டும் ராதிகாவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ராதிகா-மயூ இருவரும் பீச்சில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ராதிகா, இனி உனக்கு எந்த கஷ்டத்தையும் நான் வரவிடாமல் பார்த்துக் கொள்கிறேன்.

சீரியல் ட்ராக் :

நாம் இருவர் மட்டும் தான். உனக்கு தந்தை என்று யாருமில்லை என்று ரொம்ப எமோஷனலாக பேசுகிறார்.
இன்னொரு பக்கம் வீட்டில் கோபி பெயரில் கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வருகிறது. அதை பாக்கியா வாங்கி வைக்கிறார். பின் வீட்டிற்கு வந்த கோபியிடம் பாக்கியா அந்த கவரை கொடுக்கிறார். அதை பிரித்து பார்த்தவுடன் கோபி ஷாக் ஆகிறார். உடனே செழியன் வாங்கி படிக்கிறார். அதில் ராதிகா, கோபிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதைக் கேட்டவுடன் மொத்த பேரும் ஷாக் ஆகிறார்கள். ஈஸ்வரி, ராதிகாவை ரொம்ப மோசமாக திட்டுகிறார். கோபிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை, நெஞ்சை பிடித்துக் கொண்டு உட்காருகிறார். இதையெல்லாம் பார்த்த பாக்யாவிற்கு ரொம்ப கஷ்டமாகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement