மாமியாரையே வெளுத்து வாங்கிய ராதிகா, ஈஸ்வரி போட்ட சபதம் – விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
258
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியா, தன் வீட்டில் கோபி-ராதிகா தங்குவதற்கு வாடகை கேட்க, கோபி சம்மதம் சொன்னார். இதை எல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு கோபம் அதிகமாகி பாக்கியாவிடம் கத்தினார். ஆனால், பாக்கியா அதை பற்றி கவலைப்படவில்லை. இன்னொரு பக்கம் கோபி, பாக்கியா சொன்னதை ராதிகாவிடம் பேசிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் பாக்கியா சமைத்துக் கொண்டிருக்க, அங்கு வந்த ராதிகா, நானும் சமைத்துக் கொள்கிறேன் என்றவுடன் பாக்கியா எதுவுமே சொல்லவில்லை. பின் இருவருமே கலகலப்பாக பேசி சமைத்துக் கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

இதை பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வந்தது. ஆனால், கோபி மட்டும் ரொம்ப சந்தோஷப்பட்டார். இதை பற்றி ஈஸ்வரி, கோபி இடம் பேசி இருந்தார். அதற்கு அவர், பாக்கியா சொன்னது சரி தான். ரொம்ப நல்லவள் என்று எல்லாம் பேசினார். அதற்குப்பின் கோபி, பாக்யாவிடம் வாடகை பணத்தை கொடுத்தார். பின் எல்லோரும் வீட்டில் ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ராதிகா வந்தவுடன் ஈஸ்வரி கோபப்பட்டார். மேலும், பாக்கியா, ராதிகா-கோபியை உட்கார்ந்து சாப்பிட சொன்னார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

அப்போது ராதிகா, உப்புமா சமைத்து வைத்து இருந்தார். இதை பார்த்தவுடன் கோபி ஷாக் ஆனார். மற்றவர்கள் எல்லோருமே அதிர்ச்சியில் இருந்தார்கள். உடனே ஈஸ்வரி, இதெல்லாம் ஒரு சாப்பாடா? உடம்பு முடியாதவனுக்கு இது தருவதா? என்று கேட்க, ராதிகாவுக்கு கோபம் அதிகமானது. மையூ, கோபியால் எதுவுமே பேச முடியவில்லை. வேறு வழியில்லாமல் சாப்பிட்டார்கள். அதற்குப்பின் இனியா, ராதிகா-மையூ வந்தது பற்றி தன்னுடைய அம்மாவிடம் சண்டை போட்டார்.

கடந்த வாரம் எபிசோட்:

அதற்கு பாக்கியா, இதற்கெல்லாம் உங்க அப்பா தான் காரணம். எதுவாக இருந்தாலும் உன் அப்பாவிடம் பேசு, எனக்கு வேலைக்கு நேரமாகிறது என்று கிளம்பி விட்டார். பின் இனியா இதை பற்றி தன்னுடைய அப்பாவிடம் பேச போக, அவர் தன்னுடைய உடல்நிலை பற்றி பேசிக்கொண்டிருப்பதால் எதுவும் பேசாமல் அமைதியாக வந்து விட்டார். அதற்கு பின் ராதிகா சமைத்த சாப்பாட்டை பார்த்து கோபி ஷாக்காகி வேறு வழியில்லாமல் சாப்பிட போனார். பின் ஈஸ்வரி- கோபி இருவருமே பாக்கியலட்சுமி மாற்றத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் ஜெனி, கடையில் லாபம் நன்றாக கிடைத்து இருக்கிறது என்றவுடன் பாக்கியா, பொங்கல் ஆப்பர் போட்டு விடலாம் என்கிறார். ராதிகா, என்ன ஆபர் போடுகிறீர்கள்? என்று கேட்கிறார். உடனே ஈஸ்வரி, நீ சமைப்பதெல்லாம் சாப்பாடா? வாயில் வைக்க முடியாது, கேவலமாக சமைக்கிறார் என்று ராதிகாவை வம்பு இழுக்கிறார். உடனே ராதிகா, என் சமையல் கோபிக்கு ரொம்ப பிடிக்கும். அவரே சொல்லட்டும் என்றார். கோபி என்ன சொல்வது என்று புரியாமல் ராதிகா சொல்வதற்கு தலை ஆட்டுகிறார். பின் ராதிகா- ஈஸ்வரி இடையே வாக்குவாதம் வருகிறது.

சீரியல் ட்ராக்:

அப்போது கோபத்தில் ராதிகா, ஈஸ்வரியை தனியாக அழைத்து சென்று, என் விஷயத்தில் தலையிட்டால் அவ்வளவு தான் என்று மிரட்டுகிறார். ராதிகா மிரட்டலில் ஈஸ்வரி பயந்தே விடுகிறார். அதற்குப்பின் கோபி வந்தவுடன் பேச்சை மாற்றி அங்கிருந்து அழைத்து வந்து விடுகிறார் ராதிகா. பின் ரூமிற்கு வந்த ராதிகா, நம் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள் என்கிறார். கோபியும் ஒத்து கொள்கிறார். அதற்குப்பின் ஈஸ்வரி, மந்திரித்த கோழி மாதிரி வெளியே வந்தார். அவர், ராதிகா தன்னை மிரட்டியதை சொன்னவுடன் பாக்யாவால் எதுவுமே பேசவில்லை. அதற்கு ஈஸ்வரி, நான் யார் என்று ராதிகாவிற்கு காண்பிக்கிறேன் என்று சவால் விட்டார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement