பாக்கியாவை நடுத்தெருவில் நிறுத்த சுதாகர் போட்ட திட்டம், கோபி என்ன செய்யப் போகிறார்? பாக்கியலட்சுமி

0
110
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியா, எனக்கு ரெஸ்டாரண்டுக்கு நீங்கள் பணத்தை கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் நீங்கள் இனியாவிடம் தான் கேட்க வேண்டும் என்று ரொம்ப ஏளனமாக பேசி இருந்தார். பாக்கியா, உங்கள் மகனை வைத்து என் ரெஸ்டாரன்ட்டை வாங்க நினைத்த உங்களை விட வேறு யாரும் கேவலம் கிடையாது என்று ஆக்ரோஷமாக கத்தி இருந்தார். உடனே சுதாகர், உறவினர் என்று தான் பொறுமையாக இருந்தேன். இனிமேல் யாரையும் விட்டு வைக்கப் போவதில்லை. எல்லோருமே ரெஸ்டாரன்ட்டை விட்டு வெளியே போங்கள். இது என்னுடைய ரெஸ்டாரன்ட் என்று ரொம்ப கடுமையாக நடந்து கொண்டார். பாக்கியாவும் சுதாகருக்கு பதிலடி கொடுத்து அங்கிருந்து கிளம்பி விட்டார்.

-விளம்பரம்-

அதற்குப் பின் வேதனையில் பாக்கியா-செல்வி இருவருமே ரொம்ப எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பாக்கியா, எவ்ளோ பிரச்சனையை சமாளித்து விட்டோம். பார்த்து கொள்ளலாம் என்று நம்பிக்கையோடு இருந்தார். வேதனையில் வீட்டிற்கு வந்த பாக்கியாவிடம் ஈஸ்வரி, இனியாற்றிப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் சமையல் செய்து சாப்பிட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே பாக்கியாவிடம் பேச முயற்சித்தார்கள். மன வேதனையில் இருப்பதால் பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

வீட்டில் எல்லோருமே இனியா அனுப்பிய போட்டோக்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், பாக்கியா கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். உடனே எல்லோருமே பாக்யாவிடம் பேச, அவர் கோபத்தில் உங்கள் சம்மந்தி செய்த வேலை தெரியுமா? என்னை ரெஸ்டாரன்ட் விட்டு வெளியே அனுப்பி விட்டார் என்று நடந்ததை சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். இதனால் எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். பின் கோபி- செழியன் இருவருமே சுதாகரிடம் விசாரித்தார்கள். ஆனால், சுதாகர் அப்படியே அந்த பல்டி அடித்து மாத்தி மாத்தி பேசி இருந்தார். கோபிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் பாக்கியா, நீங்கள் என்னிடம் ஒரு மாதிரி, என் வீட்டில் உள்ளவர்களிடம் வேறு மாதிரியும் நடிக்கிறீர்கள். உங்களை போல கேவலமான ஆளை நான் பார்க்கவே இல்லை என்று
கோபப்பட்டு பேசி இருந்தார். இதனால் சுதாகருக்கு கோபம் இன்னும் அதிகமாகி பாக்யாவிடம் சண்டை போட்டார். அப்போது பாக்கியா, ரெஸ்டாரண்ட் விஷயத்தில் அமைதியாக இருக்கிறேன். ஆனால், என் மகள் விஷயத்தில் விளையாடனும் என்று நினைக்காதீர்கள். நான் சும்மா விட மாட்டேன் என்று எச்சரித்துவிட்டு வந்தார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே பாக்கியா ரெஸ்டாரண்ட் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த எழில், ரெஸ்டாரண்டில் தாத்தா போட்டோவை தூக்கிப் போட்ட விஷயத்தை சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். இருந்துமே ஈஸ்வரி, பாக்கியா மீது தான் கோபப்பட்டு திட்டி இருந்தார். இதனால் எழிலுக்கு கோபம் வந்து அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் பாக்கியா, தன்னுடைய இன்னொரு ரெஸ்டாரண்டுக்கு சென்று ரொம்ப எமோஷனலாக ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தார். பின் சுதாகர், பாக்கியாவின் இன்னொரு ரெஸ்டாரன்ட் பற்றிய விவரத்தை அறிந்து அதை பறிக்க திட்டம் போட்டார்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் புரோமோவில் பாக்யாவின் இன்னொரு ரெஸ்டாரண்டையும் பிடுங்க சுதாகர் திட்டம் போட்டார். அதற்கு அந்த ரெஸ்டாரன்டின் ஓனரை வைத்து பாக்கியாவை காலி செய்ய வைக்கிறார் சுதாகர். இதை அறிந்த பாக்கியா கோபப்பட்டு கோபி, ஈஸ்வரிடம் சண்டை போடுகிறார். பின் கோபி, சுதாகரிடம் ரெஸ்டாரண்ட் பற்றி பேசுகிறார். ஆனால், சுதாகர் எதுவுமே தெரியாதது போல் அமைதியாக இருக்கிறார்.

Advertisement