மாலை கழுத்துடன் மீண்டும் கோபி-பாக்கியா? வைரலாகும் புகைப்படம் – குழப்பத்தில் ரசிகர்கள்

0
165
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவாகரத்திற்கு பின் பாக்கியா கேன்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கோபி திருந்தி வாழும் நினைக்கும்போது ராதிகா விவாகரத்து கொடுத்தார். கோபியும் ராதிகாவின் விருப்பத்திற்கு விவாகரத்து கொடுத்துவிட்டார். ராதிகா தன்னுடைய மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். கோபி எங்கு போவது என்று தெரியாமல் பாக்கியா வீட்டிலேயே தங்கிவிட்டார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

ஈஸ்வரி சொன்ன வார்த்தைக்காக பாக்கியாவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். தற்போது பாக்கியா புது ரெஸ்டாரண்டை திறந்து இருக்கிறார். அதேபோல் செழியன் பிசினஸில் பிஸியாக இருக்கிறார். எழில் தன்னுடைய முதல் படத்தை எடுத்து வெற்றிகரமாக வெளியிட்டார். படமும் சூப்பர் ஹிட். தற்போது தன்னுடைய இரண்டாவது படத்திற்கான வேலையில் இருக்கிறார். எல்லோரும் அவரவர்கள் வேலையில் பிஸியாக இருக்கிறார்கள். கோபி மட்டும் தனியாக இருப்பதை நினைத்து கவலைப்பட்ட ஈஸ்வரி, மீண்டும் கோபி- பாக்கியாவை திருமணம் செய்து வைப்பதற்கான வேலைகளை செய்தார். ஆனால், பாக்கியா கோபியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டார்.

சீரியல் கதை:

இதனால் ஈஸ்வரியின் முயற்சிகள் எல்லாமே வீணாகிவிட்டது. அதற்குப்பின் இனியா, செல்வியின் மகன் ஆகாஷை காதலிக்கிறார். இந்த விஷயம் தெரிந்து வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆகிறார்கள்.
கோபத்தில் செழியன் ஆகாசை அடித்து வெளுத்து வாங்குகிறார். இதனால் ஆகாஷ் மண்டை, கை, கால் எல்லாம் பயங்கர அடி. இதற்கிடையில் பாக்கியா,ஆகாஷ்- இனியாவிடம் உங்களுடைய வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள். அதற்கு பிறகு எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவுரை சொல்லி சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

அதனால் இருவருமே தங்களுடைய படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், கோபி-ஈஸ்வரி மட்டும் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அதற்குப்பின் இனியா நல்லபடியாக படிக்க முடித்துவிட்டு ரிப்போர்ட்டர் வேலைக்கு செல்கிறார். ஆனால், ஆகாஷ் தேர்வில் பெயில் ஆகிறார். இருந்தாலுமே தன்னுடைய முயற்சியை விடாமல் ஆகாஷ் இருக்கிறார். பின் சுதாகர் என்ற பெரிய தொழிலதிபர் பாக்கியாவின் ரெஸ்டாரண்டை அடைய திட்டம் போடுகிறார். இனி அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

லேட்டஸ்ட் புகைப்படம்:

இப்படி இருக்கும் நிலையில் கோபி-பாக்கியா இருவரும் கழுத்தில் மாலை கழுத்துடன் இருக்கும் புகைப்படம் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலர் அதிர்ச்சியாகி இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்களா? இது சீரியல் முடிவுக்கான புகைப்படமா? இவர்கள் இருவரும் சேர்ந்தால் சீரியல் கான்செப்ட் வேஸ்ட் ஆகிவிடும். ஒருவேளை இனியா திருமணத்திற்காக இவர்கள் இப்படி மாலை அணிந்து இருக்கிறார்களா? என்றெல்லாம் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Advertisement