9 ஆண்டுகள் ரயில் நிலையத்தில் வேலை..! சம்பளம் வாங்கிய பப்பூன் குரங்கு.! முழு விவரம்

0
928
- Advertisement -

ஜாக்கின் சிக்னல் பணிகளைப் பார்க்கிற பெண் ஒருவர் அதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்குப் புகார் அளிக்கிறார். முதலில் அவர்கள் அதை நம்பவில்லை. நேரடியாக ரயில்வே நிலையத்துக்கு வந்து சோதனை செய்தனர். சோதனையில் ஜாக் பணிகளை மேற்கொள்வதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள்.

-விளம்பரம்-

- Advertisement -

“நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல

யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல

-விளம்பரம்-

உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே!

குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல!”

யாரோ யாரையோ சார்ந்து வாழ ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் அதுவே வாழ்க்கையாகிப் போகிற கதைகள் எவ்வளவோ உண்டு. அதில் காலம் கடந்தும் நிற்கிற கதைகள் ஒன்றிரண்டுதான். அதில் ஒன்று மனிதனுக்கும் பபூன் என்கிற ஜாக்குக்கும் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த கதை.

1800-களின் இறுதியில் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகர Uitenhage என்கிற ரயில் நிலையத்தில் பாதுகாவலராக இருந்தவர் ஜேம்ஸ் வைட். இவருக்கு ஜம்பர் என்கிற இன்னொரு பெயரும் இருந்தது. ஓடுகிற ரெயிலில் இருந்து அடிக்கடி எகிறிக் குதித்து சாகசங்கள் செய்வதால் அவருக்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டது. சில நேரங்களில் ஓடுகிற ரயிலில் இருந்து இன்னொரு ரயிலுக்குக் கூட பாய்ந்திருக்கிறார். அதுவே அவரது வாழ்க்கையைத் திருப்பிப் போடவும் காரணமாக அமைந்தது. 1877-ம் ஆண்டு ஜேம்ஸ் ஓடும் ரெயிலில் இருந்து குதிக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கிக் கொள்கிறார். அந்த விபத்தில் அவரது இரண்டு கால்களும் பறிபோகின்றன.

விபத்துக்குப் பிறகு மீண்டு வருகிற ஜேம்ஸ் செயற்கை கால்கள் உதவியுடன் மீண்டும் பாதுகாவலர் பணியை தனக்கு தருமாறு கேப்டவுன் ரெயில்வே நிர்வாகத்திடம் வேண்டுகிறார். ஜேம்ஸ் விபத்தில் சிக்கிய இடைப்பட்ட காலத்தில் வேறு யாரையும் நிர்வாகம் அங்கு பணியமர்த்தவில்லை. ஜேம்ஸ் இருந்த வீட்டுக்கும் ரயில்வே நிலையத்துக்கும் இடையே 500 மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்தது. வீட்டுக்குச் சென்று வரச் சிறிய சக்கர நாற்காலி போன்ற டிராலி ஒன்றை அவர் பயன்படுத்தி வந்தார். கருணையின் அடிப்படையில் மீண்டும் அதே ரயில் நிலையத்தில் ஜேம்ஸ்க்கு வேலை கிடைக்கிறது. ரயில் நிலையத்தைப் பாதுகாப்பது, வந்து போகிற ரயில்களுக்கு சிக்னல் கொடுப்பது, பூங்காக்கள் அமைப்பது என தன்னால் இயன்ற வேலைகளைச் செய்கிறார். ஒரு நாள் அவர் இருந்த நகருக்குப் பக்கத்தில் இருந்த மார்க்கெட்டில் ஒருவர் அமர்ந்திருக்க அவரைப் வைத்து டிராலி ஒன்றைப் பபூன் குரங்கு தள்ளிக் கொண்டு வருவதைப் பார்க்கிறார். உடனே அதன் உரிமையாளரிடம் பபூன் குறித்து விசாரித்து அதை விலைக்கு வாங்கி விடுகிறார்.

Advertisement