ஆனால், விஜயும் அட்லீயும். இணைவதற்கு முன்னதாகவே பாகுபலி பிரபாசை சந்தித்துள்ளார். அவருக்கென ஒரு செம்ம ஸ்கிரிபட்டுடன் அவரை சந்தித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதன் பின்னர் மெர்சல் படம் எடுத்து ஜமாய்க்க வைத்த அட்லீ மீண்டும் பிரபாசை சந்தித்துள்ளதாக தற்போது செய்திகள் வந்துள்ளது.
முதலில் சந்தித்த போது பாகுபலி - 2வில் பிஸியாக இருந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. தற்போது பிரபாஸ் ப்ரீயாகி இருப்பதால் அடுத்த படத்தை அட்லீயுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தெரிகிறது.
மேலும், இந்த படத்திற்கு ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதை எழுத்தவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.




