நீ முஸ்லீமா இருந்துட்டு இப்படி பண்ணலாமா – மதத்தை குறிப்பிட்டு கேள்வி கேட்ட ரசிகருக்கு பரீனா கொடுத்த பதில்.

0
601
fareena
- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார்.

-விளம்பரம்-

கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க ஆரம்பத்திலிருந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி, பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர் விலகி இருந்தார். இப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலை வகித்து வருகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : சாட்சி சொன்னதற்கு கொலை மிரட்டல், இறந்த சித்ரா கணவர் ஹேம்நாத்திற்கு ஜாமின் ரத்து செய்யுங்கள்- நண்பரே அளித்த மனு

பாரதி கண்ணம்மா சீரியல்:

மேலும், இந்த சீரியலில் ஹீரோயினை விட வில்லியின் இம்பாக்ட் தான் பயங்கரமாக இருக்கு. இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா. இவர் இதற்கு முன்னாடி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது நடிகையாக மிரட்டி வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

பரீனா குறித்த தகவல்:

கடந்த ஆண்டு இவர் கர்ப்பமாக இருந்தார். அதுமட்டுமில்லாமல் குழந்தை பிறப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை பரீனா சூட்டிங்கில் கலந்து கொண்டிருந்தார். இதனால் சின்னத்திரை வட்டாரத்தில் மட்டும் இல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் இவர் பாராட்டைப் பெற்றார். பின் பரினா குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்து விட்டார். மீண்டும் பரினா சீரியலில் வெண்பாவாக கலக்கி கொண்டு இருக்கிறார். தற்போது சீரியலில் வெண்பாவை திருமணம் செய்து கொள்ள அவருடைய அம்மா ரோகித் என்பவரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

சீரியலின் கதை:

ரோகித் செய்யும் சேட்டைகளால் வெண்பாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. எப்படியாவது ரோகித்தை விரட்டிவிட வெண்பா பல முயற்சிகளைச் செய்கிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் பாரதி கண்ணம்மா- ராஜா ராணி 2 சீரியல்மகா சங்கமம் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் வெண்பா பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, பரீனா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். குழந்தை பிறந்த பிறகும் தன் குழந்தை உடன் எடுக்கும் புகைப்படம், வீடியோக்கள் ரசிகர்களும் உடைந்து உரையாடுவது என்ற ஏதாவது ஒன்று செய்து கொண்டிருக்கிறார்.

பரீனா பதிவிட்ட பதிவு:

அந்த வகையில் சமீபத்தில் இவர் ரசிகர்கள் உடன் உரையாடி இருக்கிறார். அப்போது அவர் என்னுடைய சூ*** பார்ப்பதற்கு முன்னால் உங்களது முதல் பார்த்து சுத்தம் செய்து விட்டு என்னிடம் கேளுங்கள் என்று கேட்டிருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பின் இவர் தொடர்ந்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தும் இருக்கிறார். பரீனாவின் இந்த செயலுக்கு காரணம் ரசிகர்களின் அர்த்தமற்ற கேள்வி தான் காரணமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

Advertisement