இந்த கொழுந்தை உன் புருசனால் உருவானதா? இல்லை சீரியலில் வருவது போலையா? பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனரின் மனைவியை கேவலமாக பேசிய நபர் வாங்கிய பதிலடி.

0
41787
bharathi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்றுவருகிறது.இந்த சீரியலில் பாரதியாக மேயாதமான் படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார்.

-விளம்பரம்-

இவருக்கு ஜோடியாக கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி நடிக்கிறார். இந்த சீரியல் இதுவரை 330 எபிசோடுக்கு மேல் கடந்துள்ளது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் கண்ணம்மாவின் கருவில் வளரும் குழந்தை வேறு வேறு நபர் மூலமாக உருவானது என்று அவரது கணவரான பாரதி சந்தேகப்பட்டு கொண்டு வருகிறார். இதனால் தான் கோபத்தில் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறினார். தற்போதைக்கு இதுதான் இந்த தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடரை இயக்கி வரும் பிரவீன் மனைவிக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

- Advertisement -

இந்தத் தொடரை இயக்கி வரும் பிரவீன் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி மற்றும் தற்போது ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருமணம் செய்து கொண்டுள்ள ப்ரமோதித்தாவும் ஒரு நடிகைதான். பிரவீன் ப்ரமோதித்தாவும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது ப்ரமோதித்தா கர்ப்பமாக இருக்கிறார் சமீபத்தில் தனது வளைகாப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படத்திற்கு கீழே ரசிகர் ஒருவர் மிகவும் மோசமான கமெண்ட் செய்திருந்தார்.

அதில் பிரவீன் தான் உண்மையில் இந்த குழந்தைக்கு அப்பாவா ? பாரதிகண்ணம்மா சீரியலில் உங்கள் கணவர் காட்டியிருக்கும் விஷயத்தையும் அடிப்படையில் இதை கேட்கிறேன். உண்மையில் இந்த குழந்தை வேறு யார் மூலமாவது உருவானதா என்று கேவலமான சண்டை போட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள நடிகை சாய் ப்ரமோதித்தா என் குழந்தைக்கு எவன் அப்பன் என்று இருக்கட்டும் தம்பி. இப்படி, ஒரு சீரியலுக்காக இன்னொரு பெண்ணுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அசிங்கமாக பேசி மனச கஷ்டப்படுத்துர. இப்படிப்பட்ட உன்னை வளர்த்த தாய் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். இந்த சந்தேகத்தை முதல்ல உன்னோட வீட்டில கேளு, என் வீட்டுப் பிரச்சனையே நான் பார்த்துக்கிறேன் என்று தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement