ஒரு வழியாக தன் திருமணம் குறித்து அறிவித்த நாதஸ்வரம், பாரதி கண்ணம்மா நடிகை ஸ்ருதி – இவர் தான் மாப்பிள்ளையாம்.

0
769
sruthi
- Advertisement -

விரைவில் திருமணம் செய்து கொள்ளும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சின்னத்திரைப் பிரபலங்கள் பலருக்கு திருமணம் நடைபெற்று வருகிறது. அதிலும் சீரியலில் ரீல் ஜோடிகளாக இருந்தவர்கள் நிஜவாழ்க்கையில் ரியல் ஜோடிகளாக மாறிவிடுகிறார்கள். ஷபானா – ஆர்யன், மதன் – ரேஷ்மா, சித்து- ஸ்ரேயா இவர்களைத் தொடர்ந்து தீபக்- அபிநவ்யா ஆகியோர் திருமணம் செய்து கொண்தார்கள். இந்த வரிசையில் தற்போது ஸ்ருதி சண்முக பிரியன் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

-விளம்பரம்-

இவர் 1993 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தவர். இவர் பள்ளிப் பருவம் படித்துக் கொண்டிருக்கும்போதே சீரியலில் நடிக்கும் பல வாய்ப்புகள் வந்தது. இவர் நாதஸ்வரம் சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் தான் நாதஸ்வரம். இந்த தொடரை திருமுருகன் எழுதி இயக்கி நடித்தும் இருந்தார். இந்த தொடரில் பலர் நடித்து இருந்தார்கள். குடும்ப உறவுகளின் கதையை மையமாகக் கொண்டது தான் இந்த தொடர்.

- Advertisement -

ஸ்ருதி சண்முக பிரியன் சின்னத்திரை பயணம்:

இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அந்த தொடருக்குப் பின்னர் சுருதி பொன்னூஞ்சல், கல்யாண பரிசு, வாணி ராணி போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதேபோல ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டு வரும் பாரதி கண்ணம்மா தொடரில் கூட சுருதி நடித்து இருந்தார்.

சுருதியின் மல்டி டாஸ்கிங் ஒர்க்:

மேலும், மல்டி டாஸ்கிங் ஒர்க் பண்ணுவது ஸ்ருதிக்கு ரொம்ப பிடித்தமான விஷயம். சீரியலில் நடிக்கும்போது பிரஞ்ச் பாடப்பிரிவில் பி1 படித்துக் கொண்டிருக்கிறார். பிரெஞ்சு மொழியில் b1 முடித்திருந்தாலே கல்லூரியில் பிரஞ்ச் பாடப்பிரிவு விரிவுரையாளராக முடியும். அதுதவிர பிரஞ்ச் தியேட்டர் ஆர்டிஸ்ட் குரூப்பிலும் சுருதி இருந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இவர் சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.

-விளம்பரம்-

ஸ்ருதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவு:

அதனால் இவர் அடிக்கடி தனது புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் இவருக்கு கூடிய விரைவில் திருமணம் ஆகப்போகிறது என்ற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. ஸ்ருதிக்கும், அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த 27ஆம் தேதி பூச்சூடல் விழா நடைபெற்றது. இதுகுறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். பின் அதில் அவர் கூறியிருப்பது,

பூச்சூடல் விழா புகைப்படம்:

இது எங்களுடைய பூச்சூடல் விழா புகைப்படம். சீக்கிரமே நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதிகளை அறிவிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இதை பார்த்து சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ருதி தற்போது குட்டி பிரேக் எடுத்திருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement