டேய் சூரி, சோத்துக்கு வழி இல்லாம இருந்த முட்டாள் – வெளுத்து வாங்கிய பயில்வான் ரங்கநாதன்.

0
734
soori
- Advertisement -

நடிகர் சூரியை தாறுமாறாக பயில்வான் ரங்கநாதன் வெளுத்து வாங்கி இருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சின்னத்திரை சீரியலில் தனது பயணத்தை துவங்கி தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சூரி. இவர் தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்து இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் இவருடைய காமெடி மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு “விடுதலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

- Advertisement -

விருமன் படத்தின் விழாவில் சூரி சொன்னது:

சமீபத்தில் தான் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூரி கூறி இருந்தது, அண்ணா சூர்யா பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறார். ஆயிரம் கோயில்களை கட்டுவதைவிட, ஆயிரம் அன்ன சத்திரம் கட்டுவதைவிட ஒருவரை படிக்க வைப்பதே பல ஆண்டுகள் பேசும். அதை அவர் மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்று சூரி பேசி இருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஆவேசத்தில் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட வீடியோ:

இந்நிலையில் இந்து கோவில் குறித்து சூரி பேசி இருந்ததற்கு பயில்வான் ரங்கநாதன் கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், ஒரு பட விழாவில் எப்படி பேச வேண்டும் என்பது கூட தெரியவில்லை. ஒருவரை புகழ்ந்து பேசுவது தவறு கிடையாது. ஆனால், ஒருவரைப் புகழ்ந்து பேசுவதற்காக மற்றவரை இகழ்ச்சியாக பேசுவது ரொம்ப பெரிய தவறு. அதைத்தான் தற்போது சூரி செய்து இருக்கிறார். கோவிலையும், அன்ன சாலையும் ஒப்பிட்டு கல்வி தான் ஒருவருக்கு சிறந்தது என்று கூறியிருக்கிறார். உண்மையிலேயே கோவில் இல்லை என்றால் இங்கு நிறைய பேருக்கு உண்ண உணவே கிடையாது. அதெல்லாம் சூரி உனக்கு தெரியுமா? கோயிலைப் பற்றி பேச நீ யாருடா முட்டாள்!

-விளம்பரம்-

சூரியை வெளுத்து வாங்கிய பயில்வான் ரங்கநாதன்:

நீயே ஒரு இந்து தானே, நீ போய் இப்படி எல்லாம் பேசலாமா? ஏன் கோயில் கட்டுவது மட்டும் பேசற? சர்ச், மசூதி கட்டுவதை பற்றியெல்லாம் பேசலாம் இல்ல. அது என்ன இந்துக்கள் மட்டும் இளிச்சவாயனா? சினிமாவிற்கு வருவதற்கு முன்னாடி சோத்துக்கே வழியில்லாமல் இருந்தவன் தானே நீ. இப்ப ஹோட்டல் எல்லாம் கட்டி பெரிய ஆள் ஆகி விட்டால் பழசெல்லாம் மறந்து விடுவாயா? இப்போ ஆண்டவன் அருளால் தான் நீ நல்லா இருக்க. அதை மறந்து இப்படி எல்லாம் பேசுவியா. வெளிநாட்டில் இருந்து யாராவது சுற்றுலா வந்தால் உன்னோட படத்தை யாரும் பாக்க மாட்டாங்க. உங்களோட கல்விசாலை பற்றி யாரும் பார்க்கமாட்டாங்க. எல்லோரும் பாக்கறது தஞ்சாவூர் பெரிய கோயில், மதுரை மீனாட்சி கோயில்.

சூரியை எச்சரித்த பயில்வான் ரங்கநாதன்:

இந்த மாதிரி கோயில்கள் இருப்பது தான் தமிழ்நாட்டோட சிறப்பாகவே பேசுறாங்க. தமிழ்நாட்டின் சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் தாண்டா. அத தெரிஞ்சுக்கோ. படிப்பது தான் முக்கியம் என்றால் நீ ஏன்டா நடிகனா கோடிகோடியாக சம்பாதிக்கிறாய்? கலைஞர், காமராசர் எல்லாம் எவ்வளவு படிச்சாங்க? அவங்க முதலமைச்சர் ஆகலையா? படித்தால் தான் உயர்ந்தவன் என்று நினைத்தால் நீ தாண்டா பெரிய முட்டாள். இதை கூடிய சீக்கிரமே நீ திருத்திக்கோ. அதுதான் உனக்கு நல்லது. இதை நீ தொடர்ந்து செஞ்சா நிறைய விஷயங்களை சந்திக்க வேண்டி இருக்கும். இதுவே உனக்கு கடைசி முறையாக இருக்கட்டும் என்று பயில்வான் ரங்கநாதன் ஆவேசமாக சூரியை எச்சரித்து பேசி இருக்கிறார்.

Advertisement