டைட்டில் பணம் இல்லாமல் முத்துக்குமரன் 105 நாட்கள் சம்பாதித்த மொத்த தொகை எவ்வளவு தெரியுமா?

0
141
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வென்ற முத்துகுமரனின் சம்பளம் விவரம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்கள் நடந்து வெற்றிகரமாக முடிந்தது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். பின் நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், ஜெப்ரி, அன்ஷிதா, ராணவ், மஞ்சரி, தீபக், அருண் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

அதன் பின் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டி, சண்டை, சச்சரவு எல்லாம் நடந்து கொண்டு இருந்தது. கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே வெளியே போயிருந்த போட்டியாளர்களில் எட்டு பேர் உள்ளே சென்று இருந்தார்கள். பிக் பாஸ் வீடே ரணகளமாக இருந்தது. பின் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இந்த பணப்பெட்டி டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

அதாவது, பிக் பாஸ் வீட்டுக்குள் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து விட்டால் அந்த பணத்துடனே அவர்கள் நிகழ்ச்சியில் மீண்டும் தொடரலாம். அப்படி இல்லாதவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும். அந்த வகையில் இந்த டாஸ்க்கில் ராயன், முத்துக்குமரன், விஷால், பவித்ரா ஆகியோர் பணப்பெட்டி டாஸ்க்கை விளையாடி வெற்றி பெற்று விட்டார்கள். ஆனால், ஜாக்குலின் தான் இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்திருந்தார்.

-விளம்பரம்-

டைட்டில் வின்னர்:

இவரின் எலிமினேஷன் எல்லோருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் நிகழ்ச்சியின் grand finale சுற்று நேற்று நடந்து இருந்தது. முத்துக்குமரன் தான் டைட்டில் பட்டதை வென்று கோப்பையை வாங்கி இருக்கிறார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை சௌந்தர்யா, மூன்றாம் இடத்தை விஷால், நான்காம் இடத்தை பவித்ரா, ஐந்தாம் இடத்தை ராயன் வென்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

முத்துக்குமரன் சம்பளம்:

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முத்துக்குமரன் வாங்கி இருக்கும் சம்பளம் விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முத்துக்குமரனுக்கு ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் என பேசப்பட்டது. இவர் மொத்தம் 105 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தங்கி இருந்தார். மொத்தம் இவருக்கு 10 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு டைட்டில் வின்னருக்கு 40 லட்சம் 50 ஆயிரம் வழங்கப்பட்டது. இது தவிர, பணப்பெட்டி டாஸ்கில் முத்துக்குமரன் 50 ஆயிரம் ரூபாய் வென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement