விஜய் டீவியில் 100 நாட்கள் 100 எபிஸோடுகளாக நடந்த ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் தமிழ். இந்த ஷோ’வை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கினார். இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட அனைவரும் 100 நாட்கள் வெளி உலக தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும், இது தான் கேம்.
அப்படி அந்த பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் அனைவருக்கும் அவரவர் பிரபலத்தை பொருத்து ஒரு நாளுக்கு இவ்வளவு சம்பளம் என கொடுக்கப்பட்டது. மேலும், பணத்துடன் சேர்த்து அவர்களுக்கு எளிதாக புகழும் கிட்டியது. இதனை பயன்படுத்தி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் போது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, கடை திறப்பது, சினிமாவில் இன்னும் வாய்ப்பு தேடுவது, தொகுப்பபாளராக மாறுவது என பலவற்றையும் செய்தாராகள்.
ஆனால் தற்போது அதே பிக் பாஸ் குழுவிற்கு ஒரு ஆப்பு வைப்பது போல ஒன்றை செய்துள்ளது பிரபல நிறுவனம். அதில் கலந்து கொண்ட ஓவியா, ஆரவ், ஜூலி, சினேகன், மாடல் ரைசா, மற்றும் சுஜா ஆகியோரை வைத்து மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளது ஒரு பிரபல நிறுவனம்.
அதனோடு சேர்த்து அந்த கலை நிகழ்ச்சி முடியும் வரை சொல்வதை செய்ய வேண்டும் எனவும் எங்ககேயும் செல்லத் கூடாது எனவும் அக்ரிமெண்ட் போட்டுள்ளது அந்த நிறுவனம். இதற்காக ஒரு பெரும் தொகையை அனைவருக்கும் கொடுத்துள்ளது அந்த பிரபல நிறுவனம். இதனால் கமிட் ஆன படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழித்து வருகின்றனர் பிக் பாஸ் பிரபலங்கள்.