‘2 பேரு பிரேக் அப் செஞ்சத விட’ தர்ஷன் சனம் ஷெட்டி பிரிவிற்கு ஷெரின் போட்ட பதிவு.

0
36763
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிகவும் கோலாகலமாக நிறைவடைந்த இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு நடிகர் நடிகைகள் பங்கேற்றனர். அதில் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான நடிகை ஷெரின் இந்த சீசனில் கலந்துகொண்டிருந்தார். துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்த ஷெரின் அதன்பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் தமிழ் ரசிகர்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்துள்ளார் ஷெரின்.

-விளம்பரம்-
sanam-shetty

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பல்வேறு காதல் கதை ஓடியது, அதில் முதலில் ஆரம்பித்தது அபிராமி மற்றும் கவின் ரொமான்ஸ் தான் அதன் பின்னர் அபிராமி -முகேன், சாக்க்ஷி – கவின், லாஸ்லியா – கவின் என்று பல்வேறு காதல் கதைகள் மாறி மாறி ஓடி வந்தாலும் ஒருபுறம் தர்ஷன் மற்றும் ஷெரின் காதல் கதையும் ஓடத்துவங்கியது. ஆரம்பத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தாலும் மற்றவர்கள் கண்ணுக்கு இவர்கள் இருவரும் காதலிப்பது போலத்தான் தெரிந்தது.

- Advertisement -

அதனை நிரூபிக்கும் விதமாக தர்ஷனுக்கு ரகசியமாக கடிதம் எழுதி இருந்தார் ஷெரீன். ஆனால், அதனை மற்றவர்கள் படித்து காண்பிக்க வேண்டும் என்று கூறியவுடன் அதனை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார். பின்னர் அந்த கடிதத்தை ஓட்ட வைத்து படித்தார் தர்ஷன். ஷெரின் பிக் பாஸ் வீட்டில் தர்ஷனுக்கு நான் எழுதிய கடிதத்தை தர்ஷன் படித்துவிட்டான். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அதற்கு பதில் கூறுவதாகவும் கூறி இருந்தான்.

View this post on Instagram

??

A post shared by Sherin Shringar (@sherinshringar) on

ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தர்ஷனிடம் நான் பேச முயலவில்லை. அதே போல அவனும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அவருடைய தனிப்பட்ட வாழ்வில் நான் எந்த பிரச்சனையையும் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். அதனால் தான் நான் அவனை இன்னும் தொடர்புகொள்ளவில்லை என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி இருவரும் பிறந்ததற்கு ஷெரின் தான் காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி இருவரும் பிரிந்தது குறித்து ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமாக பதிவு ஒன்றை செய்துள்ளார் அதில், கடந்த ஒரு மாதமாய் நிறைய பேசப்பட்டுவிட்டது, நிறைய செய்யப்பட்டுவிட்டது. 2 பேர் பிரேக் அப் செய்து கொள்வதை விடவும் பெரிய பிரச்சனைகள் இந்த உலகத்தில் உள்ளது. எனக்கு ஆதரவாய் நின்ற அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி. தவறான கமென்ட்ஸ்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன். மக்கள் கோபமாக இருக்கிறார்கள். என்னுடைய கமென்ட் செக்ஷனில் கொட்டித்தீர்ப்பது அவர்களுக்கு அமைதியை கொடுக்கும் என்றால் அவர்கள் செய்யட்டும். என்று பதிவிட்டுள்ளார் ஷெரின். ஷெரினின் இந்த பதிவிற்கு பல்வேறு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

Advertisement