முதன் முறையாக கண் கலங்கி அழுத ரம்யா பாண்டியன் – இவரு சும்மாவே இருக்க மாட்டார் போல.

0
1823
ramya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமான மூன்று வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இந்த மூன்று வாரத்தில் அன்பு, சண்டை, பல பஞ்சாயத்துக்கள் அரங்கேறி இருந்தது. நாளுக்கு நாள் பிக் பாஸின் சுவாரசியம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. கடந்த வாரம் நாமினேஷனில் பாலாஜி, சுரேஷ், சக்ரவர்த்தி, ஆஜீத், அனிதா சம்பத், ஆரி ஆகியோர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆஜீத் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் கிளீனிங் டீமில் இருந்த பாலாஜி தூங்கிக் கொண்டிருந்த போது அவரை வீட்டை பெருக்க மீனிங் டீமில் இருந்த வேல்முருகன் அஜித் ஆகியோர் எழுப்பினார்கள் அப்போது பாலாஜி தூக்கத்தில் எழுப்பி வேலை செய்ய செல்வது சரியான விஷயம் இல்லை என்று கூறியிருந்தார். அர்ச்சனா, பாலாஜியை அழைத்து வரவில்லையா என்று கேட்க பின்னர் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து பாலாஜி வேலை செய்தார். இதனால் அர்ச்சனாவிற்கு பாலாஜிக்கும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டது.

- Advertisement -

அப்போது பாலாஜி கேப்டனாக இருந்தால் என்ன கொம்பு முளைத்து விடும் ஒருவர் உடல்நிலை முடியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களை எழுப்பி வேலை வாங்குவீர்களா அடுத்த வாரம் நான் கேப்டனாக வந்தால் அனைவரையும் அம்மி அரைக்க விடுகிறேன் என்று கூறியிருந்தார். இதனால் கடுப்பான மற்ற போட்டியாளர்கள் பாலாவிடம் வாக்குவாதம் செய்தார்கள். அதிலும் குறிப்பாக ரியோ மற்றும் அர்ச்சனா பாலாஜியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் அர்ச்சனா மற்றும் பாலாஜி இருவரும் சமாதானம் ஆகினார்கள்.

இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் ரம்யா மற்றும் மற்ற போட்டியாளர்கள் கண் கலங்கி இருக்கிறார்கள். டாஸ்க் என்ற பெயரில் போட்டியாளர்களை செண்டிமெண்ட் ஆக்கி அழ வைப்பதே பிக் பாஸிற்கு வெளியாக போய்விட்டது போல. இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் இந்த வாரம் ஷிவானி, அர்ச்சனா, ஆரி, கேப்ரில்லா, சம்யுக்தா ஆகிய 5 பெயரை தவிர பாலாஜி, சோம் சேகர், நிஷா, ரம்யா பாண்டியன், ரியோ, வேல் முருகன், சுரேஷ், அனிதா, ஜித்தன் ரமேஷ், ஆஜித்,சனம் ஆகிய 11 பேரும் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதற்கான போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement