நீங்க சந்தர்ப்பவாதி, உங்களுக்கு நடந்தா மட்டும் தப்பா – சோசியல் மீடியாவில் மல்லுக்கட்டும் அர்ச்சனா மற்றும் மாயா

0
299
- Advertisement -

பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் மாயா மாறி மாறி எக்ஸ் தளத்தில் சண்டை போடும் செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் சீரியல் நடிகர் அருண் பிரசாத் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அருண் பிரசாத்து ஆதரவாக அவரின் காதலியும், பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னருமான அர்ச்சனா சமூக வலைதளங்களில் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

ஆனால், ஒரு கட்டத்தில் பிக் பாஸ் வீட்டில் அருண் செய்யும் செயல்கள் வெளியே அர்ச்சனாவையும் பாதித்தன. குறிப்பாக முத்துக்குமரனை வேண்டுமென்றே அருண் பிரசாத் சீண்டியதால், முத்துக்குமரனின் ரசிகர்கள் அர்ச்சனா மீது ஆசிட் வீசுவேன் என மிரட்டல் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அர்ச்சனா டென்ஷன் ஆகி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்ததாக, கடந்த டிசம்பர் 3ஆம் தேதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்

- Advertisement -

மாயா பதிவு :

அர்ச்சனா அந்த பதிவை போட்டு 20 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், கடந்த சீசனில் அர்ச்சனாவுக்கு எதிரணியாக இருந்த மாயா நேற்று ரிப்ளை செய்து இருக்கிறார். அதில், டியர் அர்ச்சனா, உங்களுக்கு நடந்தவற்றை கேட்டு வருத்தம் அடைந்தேன். நீங்கள் புகார் அளித்ததில் மகிழ்ச்சி. முந்தைய சீசனை சேர்ந்த பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் இதைவிட 100 மடங்கு அதிகமான மிரட்டல்களை சிலரின் பிஆர் ஏஜென்சியால் எதிர்கொண்டனர். எங்களது குடும்பத்தினர், குழந்தைகள் கூட வன்முறை மற்றும் கற்பழிப்பு போன்ற அச்சுறுத்தல்களுக்கு ஆளானார்கள்.

அர்ச்சனாவை சீண்டிய மாயா:

அது எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பது எனக்கு தெரியும். அவர்களெல்லாம் கோழைகள், நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் அதைக் கொண்டு வந்ததால் நானும் என் அனுபவத்தை பகிர்ந்தேன். உங்களுக்கு நீதி கிடைக்கட்டும் என்று அர்ச்சனாவை சீண்டுவது போல் பதிவிட்டிருந்தார். எனவே மாயா இந்த பதிவில் சிலரின் பிஆர் எனக் குறிப்பிட்டது தன்னைத்தான் என உணர்ந்து கொண்ட அர்ச்சனா, மாயாவுக்கு பதிலடி கொடுத்து ஒரு பதிவை போட்டிருந்தார்.

-விளம்பரம்-

அர்ச்சனா பதிலடி :

அதில், ‘ உங்கள் பதிவை பார்த்தேன். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நடக்கும்போது நான் அனுதாபம் கொண்டேன். ஆனால், உங்களுக்கு நடந்தது மட்டும் தவறு என நீங்கள் நினைப்பதை பார்த்து ஆச்சரியமடைகிறேன். நீங்கள் குறிப்பிட்ட சிலரின் பி ஆர் ஏஜென்சி என் குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. நீங்கள் இந்த நேரத்தில் கூட ஒரு சந்தர்ப்பவாதியாக இருப்பதைவிட, ஒன்றாக நிற்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். செடி வாடி போச்சுன்னா சொல்லு, தண்ணி ஊத்த நான் வரை என்று பதிலடி கொடுத்திருந்தார்.

மாயா ரிப்ளை :

அதற்கு மாயா, உங்களுக்கு நடக்கும்போது மட்டும் எப்படி தப்பாக தெரியும் என்கிற வரியை நீங்களும் ஒருமுறை படிச்சிடுங்க. நீங்கள் என் பதிவை புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். நான் உங்களுக்கு ஆதரவாக தான் பதிவிட்டிருந்தேன். அதில் என் அனுபவத்தை கூட பகிர்ந்தேன். அவ்வளவுதான் என குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இதைப் பார்த்த இணையவாசிகள் ஒரு வருஷம் ஆகியும் உங்களுக்கு சண்டை ஓயவில்லையா என கமெண்ட்களில் கழுவி ஊற்றுகிறார்கள்.

Advertisement