நான் ஏன் வெற்றியை கொண்டாடல – ஆரி அளித்த முதல் எளிமையான பேட்டி. வீடியோ இதோ.

0
4179
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருந்த நிலையில் இறுதி வாரத்தில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

இறுதி போட்டியில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் மட்டும் இருந்த நிலையில் ரம்யா மற்றும் சோம் வெளியேற்றப்பட்டனர். முதல் இடத்தை மட்டும் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஆரி. பிக் பாஸ் 4 சீசனில் இறுதி வாரத்தில் மொத்தம் 31,27,72,000 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் முதல் இடம் பிடித்த ஆரிக்கு 16.5 கோடி வாக்குகளும். பாலாஜிக்கு 6.14 கோடி வாக்குகளும் கிடைத்திருந்தது. அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜியை விட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார் ஆரி.

- Advertisement -

பிக் பாஸ் பட்டத்தை வென்ற ஆரி,எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கே என்று பதிவிட்டிருந்தார்.அதே போல சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்த ஆரி, டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் இருந்தே எனக்கு ஒடம்பு சரியில்ல அதனால் தான் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள் கோபித்துகொள்ளாதீர்கள். விரைவில் உடல் நலம் சரியானதும் உங்களை சந்தித்து அணைத்து சமூக வலைத்தளத்திலும் பதில் அளிக்கிறேன் என்று கூறி இருந்தார் ஆரி.

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஆரி எந்த ஒரு பேட்டியிலும் பங்குபெறவில்லை. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள ஆரி கூறுகையில், அனைவரும் என்னிடம் கேட்கும் கேள்வி, ஏன் வெற்றியை கொண்டாடவில்லை என்பது தான். இதை எப்படி கொண்டாடவேண்டும் என்ற கோரிக்கையை உங்களிடத்தில் நான் வைப்பது, முதியோர் இல்லத்திற்கும், அனாதை ஆசிரமத்திற்க்கும் ஒரு வேலை உணவு அளித்து கொண்டாடலாம், இல்லை ஒரு விதையை விதைத்து கொண்டாடலாம், இல்லை ஒரு இளநீரைவாங்கி அதன் மூலம் ஒரு விவசாயிக்கு நீங்கள் செய்யும் உதவியாக இதை கொண்டாடலாம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement