இன்னொரு தடவ அந்த வார்த்தைய சொன்னீங்க – உச்சத்தில் சென்ற பாலா ஆரி வாக்குவாதம்.

0
2706
bala
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். , இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த இரண்டு தினங்களாக ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வந்தது. நேற்று கேப்ரில்லா மற்றும் ஆஜீத் குடும்பத்தினர் வந்திருந்தனர். இதற்கெல்லாம் மேலாக ஆரியை சந்திக்க அவரது குடும்பத்தில் இருந்து ஆரியை சந்திக்க அவரது மனைவியும் மகளும் உள்ளே சென்று ஆரிக்கு இன்ப கொடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பெஸ்ட் மற்றும் சுவாரசியம் கம்மியான போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பொது பாலாஜிக்கு ஆரிகும் சண்டை முற்றி இருந்தது.

இதையும் பாருங்க : ஜிகு ஜிகு குட்டை ஆடை, புத்தாண்டை காதலனுடன் கிளாமராக கொண்டாடிய நயன்.

- Advertisement -

தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவை வைத்துப் பார்க்கும்போது இந்த வாரம் சுவாரஸ்யம் குறைவான போட்டியாளராக பாலா மற்றும் ஆரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். கண்ணாடி அறைக்குள் இருக்கும் ஆரியிடம் பாலா கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். மேலும் இன்னொருமுறை சோம்பேறி என்ற வார்த்தையை சொன்னால் என்ன நடக்கும் என்று பாருங்கள் என்று கத்திக் கூப்பாடு போட்டு இருக்கிறார் பாலா. இது ஒருபுறம் இருக்க கடந்த திங்கள் கிழமை வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாராதிக்கான நாமினேஷன் நடைபெற்று இருந்தது .

இந்த வாரம் ஆரி தலைவர் ஆகி இருத்தால் அவரை இந்த வார நாமினேஷனில் இல்லை. இந்த வாரம் ஆஜீத், சோம், கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறாரகள். இந்த வாரம் ஷிவானி அல்லது ஆஜீத் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த வாரம் பல்வேறு வலைத்தளங்களில் நடைபெற்று வரும் வாக்கெடுப்பில் ஆஜீத்துக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், அவருக்கு அடுத்தபடியாக ஷிவானிக்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement