பிரியங்காவை தள்ளியும் விட்டுவிட்டு யார் தள்ளியது என்று கேட்ட அவரின் டீம் மேட் – இதோ வீடியோவை பாருங்க.

0
586
priyanka
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 67 நாட்களை கடந்து விறுவிறுப்புடனும் பல சவால்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. வழக்கம்போல் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனையும் கலவரமும் வெடிக்கத் தொடங்கிவிட்டது. அன்பு, பாசம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்பதே தெரியாத அளவிற்கு போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக் கொண்டு விளையாடி வருகிறார்கள். அதிலும் இந்த முறையால் டைட்டில் வின்னர் என்று யூகிக்க முடியாத அளவிற்கு போட்டியாளர்கள் தனித்தனியாக விளையாடி வருகிறார்கள். இது ஒரு பக்கமிருக்க பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது குறும்படம் தான்.

-விளம்பரம்-

இந்த முறைகளை கமலை விட ரசிகர்கள் தான் அதிக குறும்படம் போட்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று எபிசோடில் இருந்து அபிநய் குறும்படம் என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார்கள். அது என்னவென்றால் நேற்றைய எபிசோடில் கொடியை எந்த கட்சி அதிகமாக நடுகிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தது. அதற்கு மூன்று கட்சியினரும் தங்களுடைய கொடியை நடுவதற்கு ஒருத்தரை ஒருத்தர் தாக்கி போட்டி போட்டுக்கொண்டு விளையாடி கொண்டு இருந்தார்கள்.

- Advertisement -

அப்போது பிரியங்காவின் உரக்கச் சொல் கட்சியும், பிக்பாஸ் மக்கள் முன்னேற்றக்கழக கட்சியும் மோதியது. அப்போது இரு அணிகளுமே ஒருவரை ஒருவர் தாக்கி பயங்கரமாக மோதி பிரியங்கா, பவானி எல்லாம் கீழே விழுந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் தாமரை ஏன் இப்படி அடித்துக் கொண்டு விளையாடுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். உடனே அதைக் கேட்டு பிரியங்கா, அபிநய் இருவரும் தாமரையிடம் சண்டைக்கு போனார்கள். பின் பிரியங்கா என்னை கீழே தள்ளி விட்டு கொடி எடுத்து சென்றார்கள் உங்கள் அணி என்று கோபமாக கொந்தளித்தார். உடனே உன்னை யார் தள்ளி விட்டது? என்று தாமரையும் கேட்டிருக்கிறார்.

இந்நிலையில் உண்மையிலேயே யார் கீழே தள்ளியது என்று ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த வீடியோவில் பிரியங்காவையும், பவானியையும் கீழே தள்ளியது அவங்க கட்சி நபரான அபிநய் தான். அதற்கான வீடியோவை வெளியிட்டு அபிநய் குறும்படம் என்று பதிவிட்டு இருக்கிறார்கள். தற்போது இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும், பிரியங்கா ஏற்கனவே நடந்த சண்டை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தான் தாமரையை தாக்கிக் கொண்டு வருகிறார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். தற்போது இந்த நிகழ்வும் பிரியங்காவிற்கு எதிராகவே அமைந்திருக்கிறது. இனிவரும் காலங்களில் பிரியங்கா நீடித்து இருப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement