விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நிறைவடைகிறது. மிகவும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். அந்த வகையில் ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிட்சயமான நடிகையாக இந்த சீசனில் பங்கு பெற்றவர் நடிகை அபிராமி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் இவர் ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது அஜீத்துடன் இவர் நடித்திருந்த நேர்கொண்ட பார்வை படம் தான். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது நேர்கொண்டபார்வை திரைப்படம் வெளியாகி இவருக்கு நல்ல பெயரும் புகழும் ஏற்படுத்தி தந்தது. ஆனால், பிக் பாஸ் வீட்டில் இவர் செய்த ஒரு சில செயல்பாட்டால் இவரது மீது ரசிகர்களுக்கு கொஞ்சம் வெறுப்பு ஏற்பட்டது. இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் ஒரு சில வாரங்கள் தாக்குப்பிடித்தார் அபிராமி.
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களுக்கு சினிமா வாய்ப்புகள் வருவது வாடிக்கையான ஒரு விஷயம்தான். ஆனால், அபிராமிக்கு அப்படி எதுவும் படவாய்ப்புகள் வந்த வண்ணம் இல்லை. இந்த நிலையில் இவருக்கு விக்ரமின் படத்தில் நடிக்கும் ஒரு மாபெரும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், டீஸர்கள் என்று வெளியாகிய நிலையில் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. மேலும், கௌதம் மேனனும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வந்ததால் இந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டு வைத்தார். இந்த நிலையில் இந்த படத்தை மீண்டும் எடுக்க படக்குழுவை திட்டமிட்டுள்ளதாம். இந்த படத்தில் நடிகை அபிராமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் நேர்கொண்டபார்வை படத்தில் இருந்த கதாபாத்திரத்தை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.