முகென் கூட இல்லையாம் அபிராமிக்கு இவர் தான் இறுதி போட்டிக்கு வர வேண்டுமாம்.!

0
15268
Abhirami
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் பல்வேறு காதல் கதை ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் முதன் முதலாக காதல் கதையை ஆரம்பித்தது அபிராமி தான். பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார். அபிராமி இருந்த வரை முகென் அவரை காதலிக்கவில்லை என்று ஆணித்தனமாக கூறியிருந்தார். ஆனால், அபிராமி வெளியே சென்றதும் அவர் உடைத்து சென்ற மெடலை ஓட்ட வைத்துக்கொண்டு இருந்தார் முகேன். மேலும், முகென் மற்றும் அபிராமி இருவரும் காதலை மறைமுகமாக தான் வெளிப்படுத்தி வந்தனர்.

இதையும் பாருங்க : தனது உண்மையான மகளை நெஞ்சில் அணைத்தபடி நிம்மதியாக உறங்கிய சேரன்.! வைரல் புகைப்படம்.!

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அபிராமி அடிக்கடி பல்வேறு போட்டியாளர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து புகைப்படங்களை வெளியீட்டு வந்தார். இதனால் கடுப்பான சாக்க்ஷி, அபிராமியை மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார். அதே போல அபிராமி விளம்பரத்திற்காக தான் பல்வேறு பதிவுகளை போட்டு வருகிறார் என்று பலரும் குறை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கவின் வெளியேறியதை குறித்து வனிதா ட்வீட் செய்த போது தனது அடுத்த ஆதரவு லாஸ்லியாவிற்கு தான் என்று கூறியிருந்தார். வனிதா கூறியதை ஆதரிக்கும் வகையில் இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டுள்ள அபிராமி, யார் என்ன சொன்னாலும் நான் எனது தந்தைக்காக நிற்பேன் நான் அவருடன் ஒரே வீட்டில் வந்துள்ளேன் அவளுக்கு இறுதிப்போட்டிக்கு செல்ல தகுதியிருக்கிறது வனிதா சொன்னதுபோல நான் யாருக்கும் எதிரானவன் இல்லை ஆனால் என்னுடைய ஆதரவு என் தங்கைக்கு தான் நல்ல உள்ளம் கொண்டவர் என்னுடைய பூனை குட்டி என்று கூறியுள்ளார்

-விளம்பரம்-

பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை முகேன் பின்னால் நாய்க்குட்டி போல சுற்றிவந்த அபிராமியை வனிதா சென்ற பிறகுதான் என்னிடம் சண்டை போட்டு பின்னர் அவரிடமிருந்து கொஞ்சம் விலகியே இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒம்போது எனக்கு ஆதரவாக இருந்து வரும் அபிராமியே தற்போது முகேன் பெயரைக் கூறாமல் லாஸ்லியா இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அபிராமி மீது கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது

Advertisement