‘குறைகள் உள்ள என்னை துணையாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி’ தனது புதிய காதலியை அறிமுகம் செய்த அபிஷேக்.

0
590
- Advertisement -

பிக் பாஸ் அபிஷேக் தனது புதிய காதலியை தனது காதல் தினத்தன்று அறிமுகம் செய்துள்ளார். ஒரு காலத்தில் தான் வார இறுதியில் டாப் 10 நிகழ்ச்சியை பார்த்து புதிதாக வெளியாகும் படங்களின் விமர்சனங்களை நாம் பார்த்து வந்தோம். ஆனால், சமீப வருடங்களாக ஒரு திரைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே யூடுயூபில் விமர்சங்களாக வந்து விடுகிறது. அதிலும் தமிழில் விமர்சனசம் செய்யும் யூடுயூப் சேனல்கள் ஏராளம். இதில் ஒரு சிலர் மாபெரும் பிரபலமடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் பிரசாந்தும் ஒருவர்.

-விளம்பரம்-

யூடுயூப் விமர்சங்கள் மூலம் பிரபலமான இவர் பின்னர் நயன்தாரா நடித்த ‘இமைக்க நொடிகள்’ படத்தில் கூட நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். பொதுவாகவே பிக்பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் உள்ளே சென்று அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்து தான் வெறுப்பை சம்பாதிப்பார்கள். ஆனால், அபிஷேக் பல பேரின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு தான் நிகழ்ச்சியின் உள்ளே சென்று இருக்கிறார்.

- Advertisement -

அதிலும் இவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதத்தை பார்த்து பலரும் இவரை கழுவி கழுவி ஊற்றினார்கள். இதனாலே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மூன்றாவது வாரத்தில் வெளியேற்றப்பட்டார். பின் வைல்ட் கார்ட் என்றி மூலம் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் நுழைந்து இருந்தார். மீண்டும் மாறாமல் அதே திமிரு, அடாவடித்தனம், அடித்து பேசுவது என்று பிரியங்காவுடன் தேவையில்லாமல் வேலைகளை செய்து மீண்டும் வெளியேறினார்.

அபிஷேக்கிற்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆன விஷயமே பிக் பாஸுக்கு பின்னர் தான் தெரியவந்தது. இவர் தீபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் ஆன சில வருடங்களில் விவகாரத்து நடந்துவிட்டது. இந்த நிலையில், தீபாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் மீண்டும் காதலில் விழுந்துள்ளார் அபிஷேக். அவர் தன்னுடைய புது காதலியை காதலர் தினமான இன்று அறிமுகப்படுத்தி உள்ளார்.

-விளம்பரம்-

அவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ‘குறைகள் உள்ள என்னை ஒரு பார்ட்னராக மாற்றியதற்கும் என்னை விட்டுக்கொடுக்காததற்கும் நன்றி. இனிய காதலர் தின வாழ்த்துக்கள் சுவாதி. நான் ஏன் பார்ட்டிக்கு பின்னர் ஆதிபுருஷ் பிரபாஸ் போல இருக்கிறேன் என தெரியவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அபிஷேக்கை பிரிந்தது குறித்து பேசிய அவரின் முன்னாள் மனைவிநான் என்னுடைய திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து வாங்க வேண்டும் என்பதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்துவிட்டேன்.

இந்த முடிவை நான் என்னுடைய சுய சிந்தனையோடு தான் எடுத்தேன். இதனால் என்ன பிரச்சனை வரும் என்பதை யோசித்தும், அதை எப்படி எதிர் கொள்ளலாம் என்று எல்லாத்தையும் சிந்தித்து தான் இந்த முடிவை நான் எடுத்தேன். இது என்னுடைய சொந்த முடிவு. அதுமட்டுமில்லாமல் திருமணமான புதிதில் ஒரு பேட்டி ஒன்று நான் கொடுத்திருந்தேன். அந்த பேட்டி எனக்கு விவாகரத்து ஆன பிறகு தான் அதிகமாக வைரலாகி வருகிறது. தயவுசெய்து இந்த வீடியோவை நீக்கி விடுங்கள் என்று கேட்டிருந்தேன்’ என்றும் கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement