low iq உள்ளவர்கள் தான் உன்னை வெறுப்பார்கள் – இரண்டாம் முறை எலிமினேஷன் பின்னர் அபிஷேக் போட்ட பதிவுகள்.

0
588
abhishek
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் ரசிகர்களுக்கு பல பரிட்சயமான பல போட்டியாளர்களால் கலந்துகொண்டு இருந்தாலும் யூடுயூபில் விமர்சனங்களை பார்க்கும் நெட்டிசன்களுக்கு அபிஷேக் ராஜாவை பற்றி நிச்சயம் தெரிந்து இருக்கும். யூடுயூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வரும் சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துகொண்ட அபிஷேக்கை அறியாத வலைதள வாசிகள் இருக்க முடியாது.

-விளம்பரம்-

பொதுவாக பிக் பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு உள்ளே சென்று அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே ஹேட்டர்ஸ்கள் உருவாவார்கள். ஆனால், உள்ளே செல்லும் போதே ஹேட்டர்ஸ்களுடன் சென்றவர் அபிஷேக் தான். அதிலும் இவர் பிக் பாஸில் நடந்து கொண்ட விதத்தால் பலரும் இவரை மேலும், வெறுக்கத் துவங்கினர். கடந்த வாரம் கமல், யாரெல்லாம் பிக் பாஸ் பார்த்ததே இல்லை என்று கேட்ட போது கூச்சமில்லாமல் கையை தூக்கி நான் பிக் பாஸ் பார்த்ததே இல்லை என்று கூறினார் அபிஷேக்.

- Advertisement -

அதற்க்கு முன்பாகவே அபிஷேக் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து மேடையில் தர குறைவாக பேசிய வீடியோ வைரலானது. அதில் 100 நாள்ல Cm ஆகணும்னு நீங்க செய்ற வேலை இருக்கே, கேட்டா பிக் பாஸ்னு சொல்றீங்க முடியலடா என்று பேசி இருந்தார். அதே போல பிக் பாஸ் பார்த்ததே இல்லை என்று சொன்ன அபிஷேக், நாடியாவை வனிதா என்றும் மதுவை லாஸ்லியா என்றெல்லாம் ஒப்பிட்டார்.

இவரது முன்னுக்கு பின்னான பேச்சுகளால் இவருக்கு மேலும் ஹேட்டர்ஸ்கள் உருவாகினார். இதனால் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார். இருப்பினும் இவர் வெளியேறிய பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டு இருந்தது. இதனால் இவரை மீண்டும் உள்ளே அனுப்பினாள் சுவாரஸ்யம் கூடும் என்று நம்பி இவரை வைல்டு கார்டு போட்டியாளராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர்.

-விளம்பரம்-

தன்னுடைய முதல் என்ரியின் போது செய்த கிறுக்குத்தனம் எல்லாம் தன்னுடைய இரண்டாம் என்ரியின் போது குறைத்துக்கொண்டார் அபிஷேக். இருந்தாலும் முதல் என்ரியின் போது பேசிய பஞ்ச் வசனங்களை இரண்டாம் என்ரிக்கு பின்னரும் பேசியிருந்தார். அதிலும் குறிப்பாக என்னை எரித்துக் கொண்டு மக்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுப்பேன் என்று அளந்து விட்டார். அதேபோல பிரியங்கா நீர்ப் பிரச்சினையில் தன்னுடைய தலையில் சுடு தண்ணியை ஊற்றி கொண்டார்.

இப்படி இவரது கிறுக்குத்தனமான செயல்கள் தொடர்ந்து கொண்டே வந்ததால் மீண்டும் இவர் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும், இரண்டாம் முறை பிக் பாஸ் வீட்டிற்கு சென்றபோது அபிஷேக நன்றாகத்தான் விளையாடினார் என்று பலரும் கூறி வருகின்றனர். தன்னை பெருமையாக கூறிய நபர்களின் கருத்துக்களையெல்லாம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஸ்டேட்டஸில் Train விட்டு வருகிறார் அபிஷேக்

Advertisement