‘போடா பண்ணி மூஞ்சி வாயா’ – தன்னை திட்டியவருக்கு அபிஷேக் கொடுத்த பதில். மன்னிப்பு கேட்ட நபர்.

0
343
abhishek
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் ரசிகர்களுக்கு பல பரிட்சயமான பல போட்டியாளர்களால் கலந்துகொண்டு இருந்தாலும் யூடுயூபில் விமர்சனங்களை பார்க்கும் நெட்டிசன்களுக்கு அபிஷேக் ராஜாவை பற்றி நிச்சயம் தெரிந்து இருக்கும். யூடுயூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வரும் சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துகொண்ட அபிஷேக்கை அறியாத வலைதள வாசிகள் இருக்க முடியாது.

-விளம்பரம்-

பொதுவாக பிக் பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு உள்ளே சென்று அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே ஹேட்டர்ஸ்கள் உருவாவார்கள். ஆனால், உள்ளே செல்லும் போதே ஹேட்டர்ஸ்களுடன் சென்றவர் அபிஷேக் தான். அதிலும் இவர் பிக் பாஸில் நடந்து கொண்ட விதத்தால் பலரும் இவரை மேலும், வெறுக்கத் துவங்கினர். கடந்த வாரம் கமல், யாரெல்லாம் பிக் பாஸ் பார்த்ததே இல்லை என்று கேட்ட போது கூச்சமில்லாமல் கையை தூக்கி நான் பிக் பாஸ் பார்த்ததே இல்லை என்று கூறினார் அபிஷேக்.

- Advertisement -

அதற்க்கு முன்பாகவே அபிஷேக் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து மேடையில் தர குறைவாக பேசிய வீடியோ வைரலானது. அதில் 100 நாள்ல Cm ஆகணும்னு நீங்க செய்ற வேலை இருக்கே, கேட்டா பிக் பாஸ்னு சொல்றீங்க முடியலடா என்று பேசி இருந்தார். அதே போல பிக் பாஸ் பார்த்ததே இல்லை என்று சொன்ன அபிஷேக், நாடியாவை வனிதா என்றும் மதுவை லாஸ்லியா என்றெல்லாம் ஒப்பிட்டார்.

இவரது முன்னுக்கு பின்னான பேச்சுகளால் இவருக்கு மேலும் ஹேட்டர்ஸ்கள் உருவாகினார். இதனால் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார். இப்படி ஒரு நிலையில் அபிஷேக்கின் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் ஒருவர் ‘போடா பண்ணி மூஞ்சி வாயா’ என்று மெசேஜ் செய்து இருந்தார். இதற்கு அபிஷேக் ‘அன்புக்கு நன்றி’ என்று ரிப்ளை செய்ய அதற்கு அந்த ரசிகரோ ‘இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை, மன்னித்துவிடுங்கள்’ என்று பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement