திருமணத்திற்கும் பின் நானும் இந்த கொடுமைகளை சந்தித்தேன் – அபிஷேக்கின் முன்னாள் மனைவி பேசியுள்ள வீடியோ.

0
38142
deepa
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் கடந்து வந்த பாதை டாஸ்கில் நேற்று அபிஷேக் சொன்ன கதை நெட்டிசன்களால் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பல பரிட்சயமான பல போட்டியாளர்களால் கலந்துகொண்டு இருந்தாலும் யூடுயூபில் விமர்சனங்களை பார்க்கும் நெட்டிசன்களுக்கு அபிஷேக் ராஜாவை பற்றி நிச்சயம் தெரிந்து இருக்கும். யூடுயூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வரும் சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துகொண்ட அபிஷேக்கை அறியாத வலைதள வாசிகள் இருக்க முடியாது.

-விளம்பரம்-

அதுவும் இவர் பிரபலங்களை பேட்டி எடுக்கும் போது அவர்களிடம் இவர் கொடுக்கும் ரியாக்ஷன்களில் கண்டு கடுப்பாகத்தவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் ஆன்டனி பேட்டி ஒன்றில் இவர் பாடிய ‘வெயிலோடு விளையாடி’ பாடலை பலரும் வச்சி செய்தனர்.

- Advertisement -

பிக் பாஸில் கலந்துகொண்ட இரண்டாம் நாளிலேயே இவர் தன் அம்மா மற்றும் திருமண வாழ்க்கை குறித்து பேசி அழுது இருந்தார். அதே போல நேற்றய எபிசோடில் கடந்து வந்த பாதை டாஸ்கில் பேசிய அபிஷேக், தன்னுடைய திருமண வாழ்க்கை முறிந்ததை பற்றி பேசிய போது நான் திருமணம் செய்யாமல் இருந்து இருந்தாரல், நான் ஒரு தவறான ஆளாக இல்லாமல் இருந்து இருந்தால் என் அப்பாவை காப்பாற்றி இருப்பேன் என்று கூறி இருந்தார்.

ஆனால், தன் திருமண வாழ்க்கை முறிந்த காரணம் குறித்து அவர் சொல்லவில்லை. இப்படி ஒரு நிலையில் அபிஷேக்கின் முன்னாள் மனைவி தீபா, கடந்த ஜூலை மாதம் திருமணத்திற்கு பின் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், அவர், தானும் Domestic voilance அனுபவித்து உள்ளதாக பேசி இருக்கிறார்.

இதையும் பாருங்க : எப்படி இருக்கிறது சமுத்திரகனியின் ‘விநோதய சித்தம்’ – முழு விமர்சனம் இதோ.

-விளம்பரம்-

மேலும், தான் அதுகுறித்து பேசிய போது யாரும் அதை நம்பவில்லை. இதுபோல உங்களுக்கு நடந்தால் அந்த உறவை விட்டு வெளியில் வந்துவிடுங்கள் என்று பேசியுள்ளார். இந்த வீடியோவை ட்விட்டரில் பகிரும் ரசிகர்கள் அபிஷேக்

Advertisement