தொடர்ந்து அசிங்கமாக மெசேஜ் செய்த பெண் – அனிதா சம்பத் என்ன செய்துள்ளார் பாருங்க.

0
37076
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-163.jpg

அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண்போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத் தனது சமூக வளைத்தளத்தில் பெண் ஒருவர் தனக்கு தொடர்ந்து அவதூறாக மெசேஜ் செய்து வருவதாக கூறி அந்த பெண்ணின் புகைப்படத்தை பதிவிடுள்ளார். அனிதா சம்பத் பிக் பாஸுக்கு பின் வெளியேறிய சில நாளில் அவரது தந்தை காலமானார்.

இதையும் பாருங்க : அவருக்கு ‘வாழ்த்துக்கள்’ படம் புடிக்கல – பிரபாகரன் குறித்து பேசிய சீமான் – கேலி செய்த விஜய் பட இயக்குனர்.

- Advertisement -

அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த அனிதா சமபத் ஒரே சமயத்தில் அப்பாவின் இறப்பு மற்றும் சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியவில்லை என்று மிகவும் வேதனையோடு ஆரியிடம் தெரிவித்து இருந்தார். மேலும், பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. தன்னுடைய சமூக வலைதளத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத்திற்கு தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் திட்டி தீர்த்து பெண் ஒருவர் மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அனிதா, மதுமிதா என்ற இந்த பெண் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். உன்னுடைய புகைப்படத்தை Profilலில் வைத்த தைரியத்தை பாராட்டுகிறேன். எனவே, இதையும் நீ எதிர்கொள்வாய் என்று நம்புகிறேன். பெண்களே பெண்களை அசிங்கப்படுத்துவது வேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement