Bigg Boss Tamil : தம்பி தம்பினு சொல்லிட்டு பாலாஜி பற்றி தவறாக பேசிய அனிதா – வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு வெளுத்து வாங்கிய ரவீந்திரன்.

0
643
anitha
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சி முதன் முதலாக இந்தி மொழியில் தான் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்தது. இதில் ராஜு முதல் இடத்தையும், 2-ஆம் இடத்தை பிரியங்காவும் பிடித்து இருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ரசிகர்கள் சோகத்தில் இருக்கும் நிலையில் தான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புது வித்தியாசமான கதைக்களத்துடன் விஜய் டிவி அறிமுகப்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

தற்போது இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சென்று கொண்டு இருக்கிறது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல பேருக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை வாய்ப்புகள் அதிகம் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் ஏற்கனவே செய்தி வாசிப்பாளராக இருந்தவர். அதனால் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருடைய பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது.

- Advertisement -

பிக் பாஸ் விமர்சகர் ரவீந்தர்:

பிறகு இவர் படங்களிலும் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வந்தார். தற்போது இவர் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சியில் அனிதா பேசியிருக்கும் விஷயத்திற்கு தயாரிப்பாளரும், பிக்பாஸ் விமர்சகருமான ரவீந்திரன் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். தற்போது இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றியும் போட்டியாளர்களை குறித்தும் விமர்சித்து வருபவர் ரவீந்தர். இவர் மிகப் பிரபலமான தயாரிப்பாளரும் ஆவார்.

அனிதா-ரவீந்தர் பிரச்சனை:

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கினாலே போதும் அதில் வரும் போட்டியாளர்கள் குறித்து பலவிதமாக விமர்சித்து பதிவு போடுவார். அந்த வகையில் இவர் அனிதா, பாலாஜி குறித்து விமர்சித்து பதிவு போட்டு இருந்தார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பாலாஜி, அனிதா மற்றும் ரவீந்தர் மூவருக்குமே ஒரு பெரிய வாக்குவாதம் நடந்தது. பின் பாலாஜி அவரிடம் பேசி சமாதானம் ஆனார். பிறகு ரவீந்தர் தயாரிப்பிலேயே ஒரு படமும் பண்ணுகிறார். ஆனால், அனிதா- ரவீந்தர் பிரச்சனை ஓயவே இல்லை. இருவரும் மாற்றி மாற்றி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

அனிதா குறித்து ரவீந்தர் கூறியது:

இப்படி இருக்கும் நிலையில் தற்போது அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கும் அனிதா குறித்து ரவீந்தர் மீண்டுமொரு பதிவு போட்டு இருப்பது தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதில், நிரூப், அனிதா இரண்டு பேரும் விமர்சகர் ரவீந்தர் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது அனிதா பாலாஜி குறித்து பேசியிருக்கிறார். இதை ரவீந்தர் சோசியல் மீடியாவில் பதிவிட்டு கூறியிருப்பது, அனிதா நீ ஒரு தந்திரமான நரி. நீ எப்போதுமே வாழ்க்கை முழுவதும் பேக்கேஜ் சுமந்து கொண்டு போற. குழந்த இந்த முறை உன் பருப்பு வேகாது.

வைரலாகும் ரவீந்தர் பதிவு:

பாலாஜி தம்பி நல்லா தெளிவா விளையாடிக் கொண்டிருக்கிறார். சொல்லித்தான் ஆடணும் அவசியம் அவனுக்கு இல்லை. நீ திருந்தவே மாட்ட சகுந்தலாதேவி என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி இரவீந்தரின் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே அனிதா,ரவீந்தர் இடையே ஏகப்பட்ட கருத்து பிரச்சனை இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ரவிந்திரன், அனிதா குறித்து பேசியிருக்கிறார். இதை பார்த்து பலரும் பலவித கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

Advertisement