சொன்னதை போலவே கண் தானம் செய்த பிகே பாஸ் பிரபலம் – சான்றிதழுடன் கொடுத்த போஸ்.

0
908
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த மாதம் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர்.

-விளம்பரம்-

இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண்போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். அனிதா சம்பத் பிக் பாஸுக்கு பின் வெளியேறிய சில நாளில் அவரது தந்தை காலமானார். அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த அனிதா சமபத் ஒரே சமயத்தில் அப்பாவின் இறப்பு மற்றும் சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியவில்லை என்று மிகவும் வேதனையோடு ஆரியிடம் தெரிவித்து இருந்தார்.

இதையும் பாருங்க : கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருந்த விவேக் – விவேக்கின் Lol நிகழ்ச்சியை பார்த்துவிட்டு GVM போட்ட பதிவு.

- Advertisement -

மேலும், பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. தன்னுடைய சமூக வலைதளத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார். அதே போல தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக்குடன் இணைந்து நடனமாடி வருகிறார்.

. இந்த நிலையில் இந்த வாரம் இவர்கள் கண்களை கட்டிக்கொண்டு கண் தெரியாத நபர்களை போல் நடனமாடி உள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ள அனிதா சம்பத் அனைவரும் கண் தானம் செய்ய வேண்டும் அதன் முதல் படியாக நான் கண் தானம் செய்ய இருப்பதாக கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் அவர் சொன்னதை போலவே கண் தானம் செய்து அதற்கான சான்றிதழுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement