என்னோட Careerயே முடிஞ்சிருச்சி – அர்ச்சனா பேச்சால் வருந்திய நெட்டிசன்கள். வீடியோ இதோ.

0
88948
archana
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் சம்யுக்தவிற்கு பின்னர் அர்ச்சனாவின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் திருப்தியான வெளியேற்றமான அமைந்து இருந்தது. அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் பிக் பாஸ் வீட்டில் அன்பை ஓவராக பிழிந்ததால் தான். அதே போல இவர் தனக்கான ஒரு குரூப்பை அமைத்துக் கொண்டு அவர்களையும் பல இடங்களில் விளையாடவிடாமல் தடுத்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும். மற்ற போட்டியாளர்களை போல் அல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனா, தனது குடும்பத்தை பார்க்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக தான் இருந்தார்.

-விளம்பரம்-

பிக்பாஸில் இருந்து வெளியேறிய அர்ச்சனாவிற்கு அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து கேக் வெட்டி கொண்டாட்டத்துடன் வரவேற்றனர். ஆனால், சமூக வலைதளத்தில் இவருக்கு எதிர்ப்பை பார்த்து இவர் ட்விட்டரில் இருந்தே வெளியேறினார். அதே போல அர்ச்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். ஜீ தமிழ் சேனலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் அர்ச்சனா பிக் பாஸில் கலந்து கொண்டதாக கூட கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால், இது குறித்து பேசிய அர்ச்சனா, ஜீ தமிழ் சேனல்ல ஆறு வருஷம் ராணி மாதிரி தொகுப்பாளரா வேலை செஞ்சேன். ஆனா, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒப்பந்த அடிப்படையில்தான் வேலை செஞ்சேனே தவிர, அந்த சேனலின் ஊழியரா நான் செயல்படல. என்னோட தனிப்பட்ட வளர்ச்சிக்காக அந்த சேனல்ல இருந்து வெளியேறிய நிலையிலதான், எனக்கு `பிக்பாஸ்’ வாய்ப்பு வந்தது . ரெண்டு வெவ்வேறு விஷயம் என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் என்னுடைய கேரியர் காலி என்று அர்ச்சனா கூறியுள்ளார். இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் நேற்று கேப்ரில்லா 5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

-விளம்பரம்-

தற்போதைய நிலையில் ஆரி, பாலாஜி, ரியோ, ரம்யா, சோம் ஆகிய 4 பேர் இறுதி போட்டியில் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் என்ட்ரி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சம்யுக்தா ரேகா அர்ச்சனா ஆகியோர் பேசிக்கொண்டு இருக்கும் போது சம்யுக்தா எல்லாருக்கும் ஒரு வேற மாதிரி எக்ஸ்பிரியன்ஸ் என்று சொன்னதும் எனக்கு தான் கேரியர் என்றது பினிஷ் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Advertisement