பெண்களுடன் தவறாக நடந்துகொண்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு முதல் முறையாக மனம் திறந்து இருக்கிறார் அசல் கோளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்கு வாரங்களை கடந்து இருக்கிறது முதல் நாளே 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் வயிற்றுக்காடு போட்டியாளராக மைனா நந்தினி கலந்து கொண்டார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்.
இது பலருக்குமே அதிர்ச்சியை தந்திருந்தது. இவரை தொடர்ந்து முதல் எவிக்சன் நடந்தது. அதில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பரிச்சியமில்லாத நபராக கலந்து கொண்டு இருந்தவர் அசல். வசந்த குமார் என்ற தனது பெயரை அசல் கொலார் என மாற்றிவைத்து இருக்கிறார். இவர் ‘ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை அசல் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அசல் குறித்த தகவல்:
மேலும், இவர் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவது என்று இருந்தார். குயின்சி மீது ஆரம்பத்தில் இருந்தே அசல் கோலாருக்கு ஒரு கண் இருந்தது. ஆனால், குயின்சி செட் ஆகவில்லை என்று நினைத்து சிங்கப்பூர் மாடல் அழகி நிவாசினிடம் கடலை போட ஆரம்பித்தார் அசல். அதுமட்டுமில்லாமல் நிவாஸினியிடம் நீச்சல் குளம் அருகில் படுத்து கொண்டு பேசுவது, அவர் மடியில் உட்காருவது, அவரை கடிப்பது போன்ற பல முகம் சுழிக்கும் அசல் வேலைகளை செய்து இருந்தார். இது எல்லாம் ரசிகர்களுக்கு கடுப்பேற்றி இருந்தது.
அசல் வெளியேறியது:
அதுமட்டுமில்லாமல் நிவாஷினியிடம் நீச்சல் குளம் அருகில் படுத்து கொண்டு பேசுவது, அவர் மடியில் உட்காருவது, அவரை கடிப்பது போன்ற பல முகம் சுழிக்கும் வேலைகளை செய்து இருந்தார். மேலும், இதுபோன்ற நபரை Red Card கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் கூறி இருந்தனர். பின் இரண்டாவது எவிக்ஷனில் அசல் வெளியேறி இருந்தார். இதனால் நிவாசினி பயங்கரமாக கதறி கதறி அழுந்து இருந்தார்.
அசல் கோளாறு அளித்த பேட்டி :
பிக் பாஸ் வீட்டில் இருந்து அசல் வெளியேறிய போது இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை இவர் தவற விட்டு விட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர் இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் சில பேர்களை அழித்து வருகிறார் அசல் இந்த வகையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் ‘பொதுவாக இந்த இடத்தில் இருந்து வருபவன் எல்லாம் அப்படி தான் இருப்பான் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. வெளியில் நான் எப்படி இருந்தேனோ, அப்படித்தான் பிக் பாஸ் வீட்டிலும் இருந்தேன்.
வெளியில் கூட அப்படி தான் இருந்தேன்.
என்னுடைய சொந்தக்காரர்கள் வீட்டுக்கு சென்றாள் எப்படி இருப்பேனோ அப்படித்தான் போட்டியாளரிடம் நடந்து கொண்டேன் நான் தவறாக நடந்து கொண்டதாக பலர் கூறுகிறார்கள் ஒருவேளை நான் தவறாக நடந்து இருந்தேன் என்றால் அந்த பெண்களே சொல்லியிருப்பார்களே என்னை பொறுத்தவரை நான் எந்த தவறும் செய்யவில்லை இருப்பினும் நான் நடந்து கொண்ட விதம் மக்களுக்கு தவறாக தெரிந்திருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்’
அவ எனக்கு தங்கச்சி மாதிரி :
மேலும் பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு தன்னை கேலி செய்து வந்த சில மீன்கள் குறித்தும் கூறியிருந்தார். அதில் ‘ஜனனிக்கு காய்ச்சல் வந்த போது அவர் முதுகில் கைவைத்து நான் பார்த்தேன். அதை கூட தவறாக மீம் போட்டு இருக்கிறார்கள். அது என் தங்கச்சி மாதிரி, ஏன் இப்படியெல்லாம் பண்றாங்கனு தெரியல. எனக்கு எந்த பின்புலமும் இல்லை என்பதால் தான் இணையத்தில் இப்படி எல்லாம் என்னை போட்டு காலய்த்துவிட்டார்கள்’ என்று கூறியுள்ளார்.