ஆரி சொல்லாத வார்த்தையை சொன்னதாக கூறி பஞ்சாயத்தை கூட்டிய பாலாஜி – இந்த குறும்படத்த நீங்களே பாருங்க.

0
2382
aari
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வார தலைவர் பதவிக்கான போட்டி நடைபெற்றது. அதில் இறுதியில் ரியோ மற்றும் ஆரி மட்டும் நிலைத்து நின்ற போது ரியோ வெற்றி பெற்று இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஆரி, பாலாஜியிடம் ரியோவிற்கு தான் தான் விட்டுக்கொடுத்த கேப்டன் பதவியை வெற்றி பெற செய்ததாக சொன்னார் என்று பாலாஜி அனைவர் முன்பும் கூறினார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஆரியை கேள்வி கேட்க ஆரம்பித்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சம்யுக்தா, பாலாஜி, சோம் ஆகிய மூவரும் கேப்டன் டாஸ்கில் பங்கேற்ற போது பாலாஜி தனது கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்த போது ஆரி அதனை பெரிய விஷயமாக ஆக்கினார். ஆனால், தற்போது அவரே இப்படி ரியோவிற்கு கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்ததாக கூறுவது என்ன நியாயம் என்று அனைவரும் ஆரியை டார்கெட் செய்தனர்.

-விளம்பரம்-

ஆனால், ஆரியோ நான் விட்டுக்கொடுக்கவில்லை அன்று பாலாஜி, சம்யுக்தா விளையாடிய போது இருவரும் சேர்ந்து சோம் சேகர் கேப்டன் வாய்ப்பை பறித்தனர். ஆனால், நான் விளையாடும் போது நான் மற்றும் ரியோ இருவர் தான் இருந்தோம் ரம்யா எப்படி ஏவிக்ஷன் பாஸை ஆஜித்துக்கு கொடுக்க நினைத்தாரோ நான் இந்த டாஸ்கில் செய்தேன் என்று கூறி இருந்தார். ஆனால், ஆரி ரியோவிற்கு விட்டு கொடுத்ததாக சொன்னதாக பாலாஜி ஆணித் தனமாக கூறினார். ஆனால், ஆரி, பாலாஜியிடம் பேசும் போது எந்த இடத்திலும் ரியோவிற்கு நான் வீட்டுக்குகொடுத்தேன் என்று சொல்லவே இல்லை. இதனை நெட்டிசன்கள் குறும்படமாக போட்டுக் காண்பித்து உள்ளனர். ஆரி, விஷயத்தில் பாலாஜி இப்படி மாற்றிப் பேசுவது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை. சுச்சி இருந்த போது நீதி மன்ற டாஸ்க் ஒன்று நடந்தது.

- Advertisement -

சம்யுக்தா மற்றும் ஆரி பஞ்சாயத்து நடந்தது இதில் சம்யுக்தாவிற்கு ஆதரவாக பாலாஜி பேசிக்கொண்டிருந்தார்.அப்போது பாலாஜி சொன்ன பெரும்பாலான பிரச்சனைகள் ஆரியை தனிப்பட்ட முறையில் தாக்குவது போலத்தான் இருந்தது. மேலும், எதிர்பார்த்தது போல இந்த பிரச்சனையில் சம்யுக்தாவிற்கு யாரெல்லாம் ஆதரவு தெரிவிக்கிறீர்கள் என்று கணக்கெடுப்பை எடுத்து பின்னர் சம்யுக்தாவிற்கு ஆதரவாக இந்த தீர்ப்பை வழங்கி இருந்தார் சுசித்ரா. இந்த பஞ்சாயத்து முடிந்த பின்னர் ஆரிக்கும் பாலாஜிக்கும் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அதில், பாலாஜி தான் எச்சரிக்கை கொடுத்ததாக எதற்காக கூறினார் என்று கேள்வி எழுப்பியிருந்தார் ஆரி.

ஆனால் தான் எச்சரிக்கை என்ற சொல்லை பயன்படுத்தவே இல்லை என்று பாலாஜி ஆணித்தரமாக கூறினார். ஒருகட்டத்தில் இவருக்கும் பாலாஜிக்கும் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் உண்மையில் விசாரணையின் போது பாலாஜி வார்னிங் என்ற சொல்லை பயன்படுத்தினார் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் பாலாஜி அப்படி சொன்னது பிக்பாஸ் விதிகளுக்கு புறம்பானது என்றும் பாலாஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கும் நெட்டிசன்கள் குறும்படம் போட்டனர்.

-விளம்பரம்-
Advertisement