விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.இந்த சீசனில் சர்ச்சை நாயகனாக வலம் வந்தவர் பாலாஜி. பாலாஜி பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை எக்கச்செக்க சர்ச்சைகளில் சிக்கினார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது.
அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பாலாஜிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் behindwoods சார்பாக இவருக்கு Biggest Sensation On Reality Television என்ற பட்டம் வழகப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த பட்டத்தை பாலாஜி திருப்பிக்கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணமே பாலாஜி முருகதாஸ் இந்த விருது மேடையில் பேசிய 2 நிமிட வீடியோவை இதுவரை Behindwoods ஒளிபரப்பாததால் கடுப்பாகியுள்ள பாலாஜி இந்த விருதை திருப்பிக்கொடுத்துள்ளார்.இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், Behindwoods மேடையில் நான் ரிவிவ் என்ற பெயரில் மற்ற போட்டியாளர்களை பற்றி தவறாக பேசாதீர்கள். அது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். ரிவியூ சொல்றவங்க எல்லாம் காந்தியோ மதர் தெராசாவோ இல்லனு தான் பேசினேன் என்றும் ஆனால், அந்த வீடியோவை அவர்கள் ஒளிபரப்பவில்லை என்றும் கூறி இருந்தார்.
பாலாஜியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ரவீந்திரன், பிக்பாஸில் சம்பளம் வாங்கிக் கொண்டு சொகுசாக 100 நாட்கள் இருந்து விட்டு இறுதியில் சிங்க பெண்ணே என்ற பட்டத்தையும் வைத்துக்கொண்டு இதுபோன்ற விருதுகளை எல்லாம் வாங்குவதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஒருவேளை Behindwoods உங்களை தவறாக விமர்சித்து இருந்தால் நீங்கள் மேடையிலேயே விருதை வேண்டாம் என்று சொல்லியிருந்தால் அது கெத்து, அதை நான் பாராட்டு இருந்திருப்பேன் பாலாஜி என்று கூறி இருந்தார்.
மேலும், பாலாஜிக்கு ஆதரவு தெரிவித்த அனிதாவை சிம்ப்ளி வேஸ்ட் என்றும்னி கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ரவீந்தரன் அளித்த பதிலுக்கு கமன்ட் செய்த பாலாஜி., சம்மந்தம் இல்லாத விளக்கம், மற்றவர்களை தவறாக பேசி தான் உங்களின் தொழிலை வளர்கிறீர்கள் என்று கூறி இருந்தார் பாலாஜி. இதற்கு பதில் அளித்த ரவீந்தர், உன்னுடைய அறிவையும் ஒழுக்கத்தையும் வைத்து எவ்வாறு இருந்தது என்று தான் பிக்பாஸில் பார்த்தேனே. என்னை குறை சொல்வதற்கு முன்பாக உன்னுடைய திறமை என்ன என்பதை நிரூபித்துக் காட்டு.
நேருக்கு நேர் சந்திக்க உனக்கு தைரியம் இருக்கிறதா ? நான் ஒன்றும் உன்னுடைய சக போட்டியாளர்கள் கிடையாது நீ யார் என்பதை உன் வாயாலே நிரூபிக்க வைப்பேன். அதுமட்டுமில்லை உன்னுடன் நெருக்கமான சில பெண் உன்னை பற்றி ஆதாரங்களை புகைப்படங்களாக அனுப்பி சமூகவலைதளத்தில் போடச் சொன்னார்கள். ஆனால், அதை நான் செய்தால் உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை. என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னை தயவுசெய்து சீண்டாதே அப்புறம்எ என்னைத் தடுக்க முடியாது. போ போய் விளையாடு செய்பவர்கள் மகாத்மா தெரசாவை கிடையாது ஆனால் நீ ஆமிர் கான் அர்னால்டு இல்லை உனக்கு அவ்வளவு சீன் இல்லை என்று கூறி இருந்தார். ரவீந்தரனின் இந்த பதிவை அடுத்த பாலாஜி தான் போட்ட பதிவையே நீக்கிவிட்டார்.